அலசல், புத்தகம், விமர்சனம்.

Friday, 12 June 2015

திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :



திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :

நான் பார்த்த திரைப்படங்கள் வண்ணம் +ஒருவரி விமர்சனத்துடன் 
நல்லபடம் - பச்சை 
பார்க்கலாம் - மஞ்சள் 
பாக்கதிங்க - சிகப்பு 


மாஸ்  - பெய் பட வரிசையில் சூர்யாவின் படம் 

புறம்போக்கு- ​ ஜகனதனின்  மற்றும்மொரு மறுபட்டபடைப்பு

உத்தமவில்லன் - பார்க்கலாம் ஒரு வித்தியாசமான கமல் படம் 

காஞ்சனா - முனியின் மூன்றாம் பாகம் போனா சிரிக்கலாம் ...

ஓகே கண்மணி- இளசுகளின் காதல் சரி , இந்தகாதலை ஒரு சகோதரனாக இளசுகளால் அன்கிகரிக்கபடுமா ?

கொம்பன் - பருத்திவீரன் என்றாலும் பாசவீரன் 

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை - சேரனின் நம்பிக்கை 
நன்பேண்ட - ஏன்டா கழுத வேடரிங்க (குப்ப படம்)









Sunday, 31 May 2015

ஆன்லைன் ஷாப்பிங்...



ஆன்லைன் ஷப்பிங் நவீன நாகரிகத்தின் ஒரு  வரமாக வர்த்தகரீதியாக கருதபடுகிறது, இந்த ரீதியில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றனர், மக்கள் இணையதள இணைப்பின் மூலம், இந்த முறையிலான வர்த்தகத்தில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இருத்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க நினைக்கும் மக்களின் நேரம் இல்லாமை இந்த வர்த்தகத்திற்கு பெரிதும் துணைநிற்கிறது.


வாடிக்கையாளர்களின் நிறைவு

ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் முன்  அதன்  தரம் குறித்தன நுகர்வோரின் குறிப்புகள் பெரிதும் பயன்படுகிறது.
 பல வர்த்தக நிறுவனங்கள் பணம் திரும்ப தரும் வசதி, சாந்த முறையில் பொருள்களை வாங்கும் வசதியையும் அளிது வருகிறது.
அதிகமான  பொருக்களை பார்க்க குறைந்த நேரமே போதுமானதாக உள்ளது .

சேவைநிறுவனங்களின்  இலாபம்
                               மிக அதிக பொருள் செலவில் வணிக தளங்கள் நிறுவவேண்டிய அவசியம் இல்லை ,
விளம்பரத்திற்கான செல வும் மிக குறையே , சமுக இனைய தளங்களில் வாடிக்கையாளர்களே பொருள்களை பரிந்துரைகின்றனர்.
மாநில ரிதியான விற்பனை வரி வித்தியசதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் .
முதலீடுகள்  பங்குதாரர்கள் மூலம் பெறபடுகிறது .
மக்களை  கவரும் விதமாக மாய  சலுகை விளம்பரபடுத்த படுகிறது.
காலவரையாகும் பொருள்களை எளிதில்  விற்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாக உற்பத்தியாளர்களால் தேர்தெடுக்கபடுகிறது.
50 % மக்கள்  பொருள்களில் குறைபாடு இருந்தால் திரும்ப கொடுக்கும் சேவையை பயன்படுதுவதில்லை.
 
 
மொத்தத்தில் பார்க்கும் போது வருங்காலங்களில் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் விரும்புவார்கள்ம, பல வணிக நிறுவனங்கள் மூடபடலாம் அல்லது ஆன்லைன் சேவைக்கு மாறலாம் , இடைதரகு விலை குறைய வாய்பிருகிறது...

 

Sunday, 12 April 2015

மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்

 
ஒருசிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்கிறது என் எழுத்துகளும், கருத்துகளும் ....
 
சமிபகாலமாக வெற்றி கூட்டணி என்றபேரில் மீண்டும் மீண்டும் வந்த வாசமே வந்து வந்து போகிறது, இதில் சில திரை படங்கள்  வெற்றியடைந்தாலும், இரண்டு படங்களின் கட்சிகளும் ஒப்பிடும் வகையில்தான் உள்ளன. இதற்கு புதிதாக ஒரு பெயர் சூட்டும் கரணம் தான் தெரியவில்லை.
 
அதே கூட்டணி, அதே கதை களத்தில் படங்கள் எடுப்பதில் தவறில்லை; ஆனால் ஹாலியுட் படங்களை போல் பாகங்களாக தயாரிக்கலாம். புதிய பெயரில் மக்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவதை விட - இது தான் கதை என்று மக்கள் ஏற்றுகொள்வார்கள்.
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களின் வேற்றுமையை கண்டறிக என போட்டியே வைக்கலாம் .
 
மனம் கொத்தி பறவை மாறுபடியும் வெள்ளைகாரதுரை 
 
பருத்திவீரன் சில வருடங்களுக்கு பின் கொம்பன், ஆனாலும்  படம் பார்க்கும் விதமாகவே இருந்தது.
 
சில இயக்குனர்கள்  தமிழில் கூட ஹலியுட்  முறையை பின்பற்றுகிறார்கள்; உதாரணமாக- சிங்கம் 2,காஞ்சனா 2...
 
முந்தய விஜயின்   படங்கள்  ஒரே கதையமைப்பில் இருப்பது சாதாரணம் அது சற்று மாறிவருகிறது.

விஜயகாந்த், சரத் குமார் , கார்த்திக் , ஆர்ஜுன் போன்ற ரிட்டாடு ஆனா நடிகர்களின் மத்தியில் இடைக்கால நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தபட்டியல் நாளுக்கு நாள் அதிகமாக காரணம் புது முகங்களின் அறிமுகம்,  அதே சமயம் ஷாம் , பிரசாந்த் , விக்ராந்த் , ரவி கிருஸ்ன , ரமேஸ் , சிபிராஜ் போன்ற பின்பலம் உள்ள நடிகர்களின் "கம் பேக் " முயற்சிகளும் தொடர்கிறது.

அதைபோல் சினிமாவில்  தன்துறைவிட்டு தாவி தானும் ஹீரோ என  திரைக்குமுன் வந்து  தத்தளிப்பவர்களும் ஏராளம் அவர்களின் பட்டியல்  வடிவேல் ,விவேக் , சேரன் , s .j சூரியா, என  நீளுகிறது.

என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம் அதுதான் சினிமா .....
                                                                                                                               தொடரும்...
 

Monday, 19 January 2015

ஐ அழகு என்றால்; பி கே அறியாமையா ?

 

 
 
நிச்சய வெற்றி என்று களமிறங்கிய இரண்டு படங்கள்  "ஐ  " மற்றும்  "பி கே" ஆனால் ...
 
  "ஐ" திரைப்படம்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது, விக்ரமின் நடிப்புக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவரும் படங்கள், அணைத்து தரப்பாலும் பாராட்டபடும்; அதை ஷங்கர் மறந்திருப்பதாக தோன்றுகிறது. பிரம்மாண்ட படைப்புகள் கொடுக்க முன்வரும் ஆஸ்கர் நிறுவனத்தை படத்தின் வெற்றி யேசிக்க வைக்கும்.
 
விக்ராமின் கடும் உழைப்பையும், பணத்தையும் வீணாக்கி இருப்பதாகவே தெரிகிறது.விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் , அந்த நடிப்பை அந்த ஒப்பனை உருவம் மறைப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் வரும் அந்த உருவங்கள் படத்தை பார்பவர்களை முகம் மாற்ற வைக்கிறது.
 
பல கோடிகள் செலவு செய்து படம் இயக்கும் இவர்களுக்கு ரசிகனாக படத்தை 
பார்க்க மாட்டார்களா என்ன ?
" கதை திரைக்கதை வசனம் இயக்கம் " படத்தில் தமிழ் சினிமாவை அசைபோடுவது சரியாகத்தான் இருக்கிறது.
 
ஷங்கர் படங்களில் கதையிருப்பதில்லை, ஆனால் புதுமை இருக்கும் அந்த இடமும் காலியாக இருக்கிறது. கொடுத்த பணத்திற்கு முற்பதியை ரசிக்கலாம். லாஜிக் என்ற ஒன்றை மறந்தே உருவாக்கப்பட்டுள்ளது  அந்த உருவம் வரும் காட்சிகள் .

                   **********************************************


"பி கே"  திரைப்படம் செல்வராகவன் தவறவிட்ட இரண்டாம் உலகத்தை 
சாதித்துள்ளது. கற்பனைகளால் நிரப்பவில்லை குழந்தை பருவத்தில் வரும் அறியாமை அழகுபடுத்துகிறது.
 
மனிதன் பல மொழி,மதம்,இனம் என  வாழும் இவ்வுலகில்; மனதால் பேசும் மனிதர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துக்கிறது. மனிதனை பிளவு படுத்தும் வேற்றுமைகளுக்கு அடையாளம் கேட்கிறது.
 
அமீர்கான் நடிப்பில் மனதை கவருகிறார். படமுழுக்க சிரித்து மகிழ்ந்தாலும்; படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்க வேண்டியவை.

இது ஒரு மதத்தை இழிவு படுத்தும் படமல்ல மனிதனை மனிதனாக காண தடைகள் உள்ளன என காட்டும் படம்.
 
பி கே இயக்குனரின் முந்தய இரண்டு படங்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு கல்லக்கட்டின ஆனால் இந்த படத்தை தமிழுக்கு எடுத்து வருவார்களா என்பது சந்தேகமே..

                                                                                                                தொடரும்.....

Tuesday, 30 December 2014

2014 -ல் தமிழ் சினிமா ஒரு கண்ணேட்டம்


                              2014 -ல் தமிழ் சினிமா ஒரு கண்ணேட்டம்


காதல் காவியங்கள்  :
மேகா -
அமரகாவியம்  -
திருமணம் என்னும் நிக்கா -

புதிமை :
ஜிகிர்தண்டா -
கோச்சடையன் -
கதை திரைகதை வசனம் இயக்கம் -


இயக்குனர் வாழ்த்துக்கள் :
தெகிடி -
கோலிசோட -
மஞசபை -
சைவம் -
சலீம் -
ஜிகிர்தண்டா -
நாய்கள் ஜாக்கிரதை -

வெற்றி கோடு :
  
ஜில்லா
வீரம்
அரண்மனை
கத்தி
பூஜை
லிங்கா
ஜிகிர்தண்டா
வேலையில்ல பட்டதாரி
மெட்ராஸ்
கோலிசோட
மான்கரதெ


ஏமாற்றம்  :

அஞ்சான்
கோச்சடையன்
சிகரம்தொடு
யான்




                                                                     தொடரும் ....


 

Friday, 21 November 2014

கத சொல்ல போறேன் ...

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மனிதனால் கணக்கிட முடிந்தால்...?

இறந்தபின் உடலை விட்டு பிரியும் உயிர் போகும் இடம் அறிந்தால் ...?


மனதத்துவ விஞானி வில்ப்ரெட் ஒரு புது விதமான உயிர்களின் வாழ்நாள் கணக்கிடும் தத்துவத்தை கண்டுபிடிக்கிறார் . தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவிக்கும்  முன் அதை நிருபிக்க பல பிரபலங்களின் வாழ்நாளை  ஆராய்கிறார் . அதில் சினிமா ஸ்டார் ஆன மேல்டோன்  மிககுறைந்த  வாழ்நாளில் முதல்லிடம் பிடிக்கிறார். அவரது வாழ்நாளில் மீதம் இருப்பது. ஏழு நாள்கள் .


தனது ஆரழ்ச்சி முடிவை மேல்டோன் னிடம் விளக்குகிறார் வில்ப்ரெட்; தன் கண்டு பிடிப்பை  உலகிற்கு விளம்ம்பரபடுத்த உதவும்மாறு கேட்கிறார் வில்ப்ரெட்



தனது வாழ்நாள் முடிவை அறிந்து கொள்ளும் மேல்டோன் தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை ஏழு நாள்களில் முடிக்க நினைக்கும் துடிப்போட்டம்...

தொடரும் ...

Saturday, 11 October 2014

அண்ணாச்சி என்னாச்சி ; அம்மா ஆட்சி


 "அண்ணாச்சி என்னாச்சி"

"என்னனு சொல்லுவேன்;ஆரம்ப காலத்தில தொழிலுக்கு புதுசு. அதன் மாட்டிகிட்டது, புடிச்சி உள்ளபோட்டபிறக்கும் தமிழ்நாட்ட விடாம ஆட்டுது."

"என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிறிங்க; கடைசி நடத்த எலைசன்ல கூட அமோக வெற்றி தான்னுங்களே "

"அதுதான் அண்ணாசி அம்மையாருக்கு ஆப்பா போச்சின்னு பேசிக்கிறாங்க, பிரதமர் ஆக ஆசைபட்டு முதல்வரும் போச்சி"

"பாவம் அண்ணாசி பொது மக்கள் பாடாய் படுறாங்க போக்குவரத்து பெரிசா பாதிக்குது."

"அது உண்மைதான் அண்ணாசி, ஆனா இப்ப கூட காட்சி காரங்க எலைசன் டைம் போல காசு செலவு பண்ணுறாங்களாம்."
 
"ஆமா அண்ணாசி கேள்ள்விபட்டேன், மொட்டை அடிச்ச 200ரூபா, ஊர்வலத்தில வந்த  100 ரூபா, உண்ணவிருததில கலத்துகிட்ட 500 ரூபா-னு  ஒரு லிஸ்றே வைச்சிருக்கன்களாம்."
 
"அது மட்டுமில்ல அண்ணாச்சி, இந்த தடவ பெரிசா பனிருக்காங்களாம்; தனியார் கல்வி நிறுவனக்கள மூட ஒரு ரேட்டு, தனியார் பஸ் நிறுத்த ஒரு ரேட்டுன்னு". 
 
"என்ன பண்ணியும் ஜமீன் கிடைக்கலையே ?"
 
"அது ஒண்ணுமில்ல அண்ணாச்சி  எதிர் தரப்பு தீர்ப்புல உறுத்திய இருக்காங்களாம்"
 
"இந்த சினிமா காரங்க சப்போர்ட் பண்ணுறதா தெரியுது, அதுவா நடிகிறவங்கனுக்கு சொல்லியா கொடுக்கணும், காசுதான் வாங்கமுடியாது. கடைசிவர கணக்கு  காட்டாம பணம் சம்பாதிக்கணும் இல்ல."
 
"இவங்க கலவரம் என்கிற பேருல பொது சொத்துகள நாசம் பண்ணுறத, ஆளும் கட்சின்னு யாரும் கேக்க மட்டேன்கிறான்களே ?"
 
"நீங்க வேற அண்ணாசி ஒரு போட்டவை கூட மாத்த பயருறாங்க அப்புறம் எப்படி கலவரத கட்டு படுத்துவாங்க; அதன் கூட்டம் கூடின ஊர்வலம்னு கிளம்பிருறாங்க"
 
"பொது சொத்துகள நாசம் பண்ற காட்சி ஏத இருத்தாலும்; அபராதம் விதிகணும்; கட்டலென்ன அடுத்த தேர்தல சம்மதபட்ட இடத்துல போட்டியிட தடைவிதிக்கணும்."
 
"இதெல்லாம் நடக்குங்களா அண்ணாசி; ஏதோ பொது மக்களுக்கு பாதிப்பு இல்லெனா  சரி, என்ன பண்ணியும் உபயெகம் இல்லாததால புதுசா பெட்டி மாத்திகிலாமுன்னு எதிர் தரப்போட பேசிகிறாங்களாம்."
 
"ஆமா அண்ணாச்சி கூடுதலா கொடச்சல் குடுத்த திகார் தான்னு கேள்வி பட்டாங்க போல; என்ன நடக்குமுன்னு பொறுத்திருந்து பாப்போம்."
 

Wednesday, 24 September 2014

நல்லது கேட்டது நாலுபேருக்கு தெரியனும் இல்ல ...

* லிங்குசாமி இரட்டை வேடன்னா எம்.ஜி.யார் காலத்திலேயே இருக்காரப்பா.

*ஐ  ட்ரைலர் பார்த்தா விக்ரம் பின்னிருக்காரு போல  தெரியுது.

*திரைப்படத்தின் கடைசி பதினைத்து நிமிடங்கள் முக்கியமானது அதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. (ஜிகிர்தண்டா ,மங்காத்தா ,பிட்சா )

*படத்தில ஹிரோயின் நடிச்சி  காட்டி  போட்டிபோடுவாங்க ; இப்ப காட்டுறதில மட்டும் தான் போட்டி போடுறாங்க.

*சிவாஜி குடுபத்தில இருந்து வந்த பையன் படகள அடுகிறனே தவிர முதல் படம் தான் இன்னும்.

*தம்பி ஆக்ஸனு  பறக்காம கதைகளே நடிங்கபா, எல்லேருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.

*மலையாள திரையலகில் வெற்றி பெறும் படங்கள் பலவற்றின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளன.(bangalore  days, how old are you,...)

*கன்னட திரையலகம் பவர் திரைபடத்தின் மூலம் அடுத்த கட்ட வியாபார உலகத்தில் கால் வைத்துள்ளது.

*"எக்ஸ்பண்டப்ள்" போல் தமிழிலும் எக்ஸ் ஹீரோக்கள் சேர்த்தல் நல்லாத்தான் இருக்கும் தயாரிப்பாளர் கிடைப்பதுதான் கடினம்.

*பிரபல இசையமைபாளர்கள் இசை கூட இரைச்சல் ஆகிவருகிறது.
 

Thursday, 14 August 2014

இருபதாம்நுற்றாண்டிலும் வெள்ளையனே வெளியேறு...



வெள்ளையனே வெளியேறு  என்ற குரல் புதுமை படுத்தபட்டுள்ளது.
வெள்ளையனே வெளியேறு என்றால் வெள்ளை நிறம் கொண்டவர்களை வெளியேற சொல்வதில்லை. வெளிநாட்டவரின் அதுமிறலையும், அடக்குமுறைகளையும் வெளியே துரத்துவது.

இன்று  சுகந்திர தினா விடுமுறை. ஆனால் இன்றும் வெளிநாட்டவனின் வேலைக்காக நம் மக்கள் ஓயாது உழைக்கின்றனர்.

தேசியகீததிலிருக்கும் விடுதலை என்னவே இம்மக்களை சேரவில்லை போலும்; அல்லது இந்த இடங்கள் இந்தியாவில் இல்லையே என்னவோ !
இங்குநடப்பதை பார்த்தல் நவீன  முறையில் வெளிநாட்டவன் ஆட்சி


வெள்ளையனே வெளியேறு தொடரும் ...

Saturday, 19 July 2014

கண்மூடி திறக்கும் போது ...


                                                                          கண் 
மனிதனின் விடியல்; மனிதன்  உலகை காண படைக்க  பட்ட  உறுப்பு இரவு பகல் மாறுபாட்டை மனிதனிக்கு காட்டுவது. நிறம் என்ற ஒன்றே கண்ணிருப்ப்பதால் தான். ஒரு நிமிடம் நமக்கு கண்ணில்லை எனில்! உலகமே இருண்டுவிடும்நமக்கு. "ஒரேநிறம்"  கண்ணிருக்கும் நாம் அதற்கிட்ட பெயர் கருப்பு. கண்ணில்லாத வர்களுக்கு அதுவே உலகம்.



   உலகை காணும் விளக்கான கண் மண்ணில் புதைக்க படுவதை  விட  மனிதரில் விதைக்க படலமே,. மனிதன் இறந்தபின்னும் மனிதனின் புகழ் நிலைத்திருக்கும், ஆனால் மனிதனே இவ்வுலகை காண்பதற்கு மனிதனின்  கண்களுக்கு மனிதனே வாழ்நாளில் வழி வகுத்துவிடுவாயா....? 

  மின்விலகில்லாமல் சிலமணிநேரங்கள் கூட நம்மால் பொருத்து கொள்ள முடிவதில்லை ஆனால் வாழ்நாள் முழுவாதுமே விடியலே கண்டிராத மனங்கள் நம் கண் மூடுபொதாவது திறக்க செய்யலாமே! விழிதிறந்து வைக்கும் நம்-புகழ் விண்ணையே தாண்டி நிற்கும் .


காதுகளை கண்ணாகி, உணர்வுகளில் உருவம் தேடும் மனிதருக்குகண்ணிருக்கும் நம்மைவிட  விழிப்பு அதிகம்; ஆனால் விடியால் இல்லை.இறந்தபின்னும்  விழித்திருப்போம். விழி மூடி விளிதேளுவோம். கண்மூடி திறக்கும்போது; நம் கண்கள் நம்மைய கடவுள் என்கும். மனம் கணிதிடுங்கள் மனிதனும் கடவுளாகலாம்.......



Monday, 16 June 2014

வருவதற்கு முன் பொம்மைபடம்; வந்தபின் புதுமை படம்

"வருவதற்கு முன் பொம்மைபடம் வந்தபின் புதுமை படம்", கோச்சடையன் படம்  சாதித்திருப்பது  இதுதான். 


சாதாரண அனிமேஷன் படமாக கருதப்பட்ட இந்தப்படம், வருக்கால தொழில்நுட்பத்தின் பாதையாக அமைத்துள்ளது. படத்தை ஒருமுறையாவது பார்க்காதவர்கள் இல்லை.
இந்திய சினிமாவின் பரிமாணமாறுதலில் மயில் கல்லாக இருக்கபோகும் படம். ஆரம்பத்தில் அனிமேசன் உணர்வு மனதை விட்டு மாற மறுத்தாலும்; ரஜினி அதை சரிசெய்துவிடுகிறார். 

படத்தில் குறைகள் உள்ளன . இருப்புனும் நிறைகளை பட்டியலிட வெடியதருணமிது .

* ரஜினி இது ஒரு நடிக்கரின் பேரல்ல சினிமாவின் ஒரு ப்ப்ரண்ட்  , இந்தியவை தாண்டி இந்த ப்ரண்ட் விற்பனை ஆகும்.

*நாகேஷ் கதாபத்திரம் வருங்கலத்தில் மறந்த நட்சத்திரங்கள்  கதாபத்திரங்கள் ஆக போவதை உறுதிபடுத்துகிறது. (ராஜமொலி ஒரு பாடலில் NTR யை ஆடவைத்திருந்தார்)

*இசையில் A .R  தவறவிடவில்லை அது போர்காட்சிகளில் தெரிகிறது. அனிமெசன்படதில் பாடல்களா ! சரியாக பயன்படுத்தபடுகிறது.

*Lord of the rings படத்தில் கையாளபாடுவதைபோல் அனிமேஷன் விலங்குகள் 3D யில் பிரமிக்க வைக்கின்றன.


Monday, 26 May 2014

அசத்தியது அ .தி.மு. க !!!..

   மதவாத கட்சியாக கடந்த சில தேர்தல்களில் ஓரங்கட்ட பட்ட பாரதிய ஜனதா கட்சி தனக்கென்று ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

  அதை போலவே விஜயகாந்த் தன் ரசிகர்களிடத்திலிருந்து ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பதும் உண்மை . இன்றைய தமிழக அரசியலில் புதிதாக முளைத்த கட்சியாக ஓரங்கட்ட படாத அளவுக்கு ( தே. மு. தி. க) வரவு உள்ளது.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் (தி மு க ) வின் பயங்கரமான பிரச்சாரத்தை மீறி
புதிய கட்சியின் மேல்(ரசிகர் அல்லாதா   மக்கள் நம்பிக்கை கொண்டனர் ).
(தி. மு க )வின் அம்புகள் ஏனோ (தே  மு தி க ) வை  பெருமளவு துளைக்கவில்லை.

ஆனால் ;
இந்த யூகங்கள்  எல்லாம் கன்னியாகுமரியை தவிர எங்கும் பலிக்கவில்லை.

அசத்திவிட்டது  அ .தி.மு. க !!!..

Monday, 14 April 2014

வர+தட்சணை =வரதட்சணை வாங்கலாம் !



திருமணங்கள் செர்க்கதில் அல்ல ரோக்கதில் நிச்சயக்க படுகிறது. என்ற பெண்விட்டாரின் குற்ற சாட்டு நியாமற்றது. காரணம் இன்று திருமணங்கள் வெறும் மன பொருத்தத்தை மட்டும் பார்த்து நடப்பதில்லை ; இங்கு பார்க்கப்படும் பல்வேறு பொருத்ததில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதில் தவறில்லை காரணம், வாழ்க்கை என்ற வண்டிக்கு  பணம் என்ற எரிபொருள் அவசியமானது.

ஆண் -பெண்  இருவரும் பணிக்கும் வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு தங்களது இருவரது வருமானம் சம  சரியாக  கலப்பதில் தவறில்லை.  ஆண்  பெண்ணுக்கு நிகராக கருதப்படும்போது. தான் படித்த படிப்பு, அழகு , குடும்ப பாரம்பரியம் என்று பார்க்கும் பொருத்ததில் பணமும் சேர்க்கபடுகிறது. 


பெண் விட்டாருக்கு வர தட்சணை கொடுக்கவேண்டும் என்ற பெண் புரட்சியின் வாதம் சற்று உற்று நோக்க வேண்டியது, இங்கு  பெண்கள்  விலை பொருளா  என்ன  ?

பெண்வீட்டர்  பார்க்கும் ஆணின் பொருளாதாரத்தையே ஆண்வீட்டரும் பார்க்கின்றனர். இங்கு கட்டாய படுத்துவதை வேண்டுமானால் தவறேன்கலாம். ஆனால் கமிட் மெண்ட் ஆகவே அரேஞ்சி மேரேஜ் உள்ளது.





Saturday, 22 March 2014

இரண்டாம் உலகம் ரிட்டன்ஸ்

    செல்வராகவன் படங்களில் இரண்டாம் உலகம் படம் கற்பனை வழம் குன்றி காணப்பட்டது. நல்ல கதை கரு  அதில் பழைய கால அரச வாழ்க்கையே மேலோங்கி இருந்தது. புதுமையான உலகம் சற்று சறுக்கிவிட்டது. என் கற்பனையை அந்த கதை கருவில் தூவி விட்டுபார்கிறேன். " இரண்டாம் உலகம்    ரிட்டன்ஸ் "



நமது  உலகத்தில் உள்ளது போல் அங்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது.
மனிதர்கள் ஒரே தரம் உயர்ந்தவன் தலைவன் இல்லை. சிலவித்தியசமான நாட்களில் பிறக்கும் அபூர்வ குழந்தைகளை கொன்றுவிடுகின்றனர். மற்ற படி அவர்களுக்குள் எந்த ஒருமைப்பாடும் இல்லை. மனம் போல் வாழ்க்கை.

அவர்களின் சபகேட்டில் முக்கியமானது. தூங்கி விழிக்கும்போது முந்தய தினம் நடந்த சம்பவங்கள் மனதில் நிலைப்பதில்லை.

அங்கு பிறக்கும் ஏழு மனித தன்மைபடைத்த அபூர்வங்கள் அவர்களுக்கு கடவுளாக நினைக்கிறார்கள். 

மனிதன் வெற்றி பெற்றான ? அபூர்வ பிறப்பை இனம் கண்டு அளித்தார்களா என்பது முடுவு .
தொடரும் ...

Tuesday, 25 February 2014

தவிர்க்கப்பட வேண்டிய பாடல்கள்

                                                 
தமிழ் திரை உலகம் இன்றைய நிலையில் வியாபார நோக்கமாக வளர்ந்து வருகிறது,  இந்தி திரையுலகை ஒப்பிடுகையில்திரைபடத்தின் விளம்பர உத்தியினால்  நூறு கொடிகளில் கணக்கு வருகிறது.   தமிழ் திரையுலகமும் அதையே பின்பற்ற நினைக்கிறது. படத்திற்கு தேவை பட பாடல்களை திணித்து படத்தின் வேகத்தை குறைகிறது.

                                                           

   மலையாள திரைஉலகில் சமீபகாலமாக வரும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.  இவைகளில் இருக்கும் ஒற்றுமை புதிய தலைமுறைகளின் பங்கேற்பினால் புதுமையான திரை கதை அமைப்பு. இதற்கு முக்கிய காரணங்களை பார்த்தால்;


                                                                              



    முக்கிய சில திரைப்படங்களில்  பாடல்களின் எண்ணிக்கை குறிப்பிடும் வகையில் உள்ளது. கதைக்கு தேவையில்லாத எந்த பாடலும் காண்பதில்லை . இவற்றில் பல படங்கள் தமிழுக்கு கொண்டுவரபடுகிறது, ஆனால் அதில்கூட பாடல்கள் திணிக்கபடுகிறது . படங்களின் வெற்றியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

                                    


இனிமேல் வரவிருக்கும் படங்களிலாவது பாடல்கள் குறைந்தால் திரைக்கதை வேகம் அதிகரிக்கும். சமிபத்தில் சாதித்த மலையாள படங்கள்.



Friday, 24 January 2014

ட்ரை ஒரு செயல் படாத அமைப்பா ?


   ட்ரை  இந்தியாவில் தொலைதொடர்பு குற்றங்களை குறைப்பதற்காக அரசால் இயக்கப்படும் அமைப்பு; இது இன்று இயங்குகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது .


 "மொபைல்நம்பர் போர்டப்ளிட்டி"பிரச்சினை அதில் முதன்மையானது. தொலைதொடர்பு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய சேவை நிறுவனத்தை மாற்ற நினைக்கும் மக்களின்  ஒரு சதவீதம் கூட அந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா என்பது சந்தேகமே!


  மக்களின் போர்டபில் முயற்ச்சி பலனளிக்காமல்          இழுத்தடிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதன் பின்னால் மாதகணக்கில் அலைய முடியாதவர்கள், தொடர்ந்து தங்களுடைய பழைய நிறுவனத்தின் அக்கிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். பதினைத்து நாட்களில் "போர்ட் கோடு" என்னவோ காலாவதி ஆகிவிடுகிறது. பயனாளிகளின் பிரச்சினை காலம்  கடந்து வருகிறது. 

போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்; தவறான போர்ட்கோடு, வாடிக்கையாளர் மறுபரிசிலனை, போர்ட் கோடு காலாவதியாகி விட்டது, தங்களின் புதிய சேவை நிறுவனத்தில் பிரச்சினை;  என்று நீள்கிறது ....

ட்ரை  செயல்படுமா ???


Monday, 30 December 2013

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள் :


சிறந்த இயக்குனர்  -  பாலா (பரதேசி )

வெற்றி நாயகன்  -  சிவகார்த்திகையேன் (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நீச்சல் )

கனவுக்கன்னி  ​ -நஸ்ரியா  (நேரம், ராஜாராணி ,நையாண்டி )

சிறந்த இசை - G .V  பிரகாஷ் குமார் (பரதேசி, ராஜாராணி, உதயம் NH 47,..)

நகைசுவை முத்திரை - சூரி (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம்,நையாண்டி,...)



Monday, 25 November 2013

கலைக்குடும்பத்தின் கத்திப்படங்கள்

கத்திப்படங்களின் எண்ணிக்கை தமிழ்த்திரையில் அதிகரித்துவிட்டது, காமெடியில்  தொடங்கி ஆக்சன் வரை வந்துவிட்டது ......






Saturday, 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

Monday, 30 September 2013

சுசிந்திரன் சொன்ன காதல் கதை ...


திரைப்பட தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு "ஆதலால் காதல் செய்வீர்" ஒரு சிறந்த உதாரணம் .




படம் பார்க்குமுன் படத்தின் தலைப்பு ஒருவித காதல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது. படம்பார்த்தபிறகு  படத்தின் தலைப்பு இயக்குனரின் ஆளுமையை மனதுக்குள் பதிக்கிறது .
நாடோடிகளில் உறுதியற்ற காதலால் நண்பர்களின் பதிப்பை பார்த்த நமக்கு
அதே காதலால் குழந்தைகளின் ஏக்கத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் கடைசி ஆறு நிமிடங்களில் யதார்த்த படுத்தியள்ளர் இயக்குனர் .