அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday 24 November 2012

முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்





 மனிதவாழ்வில் உண்மையான மனிதர்களை பார்ப்பது அரிதினும் அரிதாகிவிட்டது மனிதர்கள் சுயலாபத்திற்காக போலி முகமுடிகளுடனே நடமாடிக்கொண்டு  இருக்கிறார்கள். சதுரங்க ஆட்டத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசமே உள்ளது. ஆனால் அதை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுக்கொள்வது கடினம்.

  சதுரங்க ஆட்டத்தில் இரண்டு நிறங்களே உள்ளன. ஆனால்  மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருநிறம். மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்வதும் கடினமே. போலி புன்னகையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முகமூடிக்கு உள் உள்ள உள்ளத்தில் புதைந்துள்ள வஞ்சம்,பொறமை, இவற்றை அடியாளம் காணவேண்டும். எதிரில் நிற்கும் பகைவனைவிட அருகில் இருக்கும் துரோகியே ஆபத்தானவன் . எதிரில் இருப்பதால் ஒருவன் எதிரி அல்ல ,அருகிலிருப்பதாலே ஒருவன்  நண்பனும் ஆகிவிட முடியாது.


  சதுரங்க ஆட்டத்தில் எப்படி களத்தில் உள்ள ஒவ்வொரு காய்களின் அடுத்தடுத்த நீக்கங்களை  கணிப்பத்து முக்கியனானதோ; அதைவிட முக்கியமானது, நாம் வாழும் உலகில் நாம் நகரும் பொழுதுகள். இங்கு கருப்பு வெள்ளை வித்தியாசம் தெரிவதில்லை கருப்பு மனிதர்கள் வெள்ளை முகமூடியுடனும், வெள்ளை மனம் படைத்தவர்கள் கருப்பு சாயத்துடனும் வெளியில் தோன்றலாம் .

  அன்று முதல் இன்றுவரை  பழைய வாழ்க்கையை மறந்து வாழ்வது  மனிதர்கள் இயல்பாக உள்ளது. அடுத்த நொடி தனக்குரியதில்லை. என்பதை எண்ணாமல் தனக்கு மேலிருப்பவனைக் கண்டு அழுவதும்; கீழிருப்பவனை கண்டு சிரிப்பதுமே மனிதனின் மனம். மனிதனை மனிதனாக பார்க்காமல் சாதி, வசதி, மதம், இனம், மொழி இவற்றை கொண்டு வேறுபடுத்தி பார்க்கின்றனர். காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் .

  மனிதர்களின் அக எண்ணங்களை கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தில் கட்டும் முகமூடியை  பிரித்தறிய வேண்டும். வாழ்கையில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானதே. இங்கு சண்டியர்களை விட சாணக்கியர்களே  பலம் வாய்ந்தவர்கள் ...




Monday 12 November 2012

ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன்

 எல்லோருமே திருடங்கதான் பதிவைதொடர்ந்து நிகழ்ச்சி வடிவில் அடுத்தபதிவு  ""ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன் "" இந்த பதிவில் பிரபல தமிழ் நடிகருடன் அந்நியன் நடத்திய கருடபுராண வதத்தை பதிவுசெய்கிறேன் .

  வணக்கம் நேயர்களே நம்முடைய யாரென தெரிகிறத நிகழ்சியின் புதிய பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன். இன்றைய நிகழ்சியில் அந்நியன் பிரபல நடிகரை காப்பியடித்த குற்றத்துக்காக கருடபுரனத்தின் படி  தண்டணை  வழங்க சந்தித்தபோது நடந்த  உரையாடலை உங்களுக்கு வழங்குகிறேன். 

"முந்தைய பதிவுகளை படித்தவர்களுக்கும்,பின்னுட்டம் தந்த பிரபல பதிவளர்களுக்கும் நன்றிகள் ..."


யாரென தெரிகிறத- 2

அந்நியன்: தமிழ் சினிமாவ வளரவிடாத குற்றத்திற்காக  கருட புராணத்தின்படி 100 தடவ நீ நடிச்ச படங்களா நீ பாக்கணும் ...

காப்பிகரான்: அண்ணா நான் யாருன்னு தெரியுமா ?

அந்நியன்: தெரியும்ட பாடு தமிழ்த்திரை படங்களை உலகஅளவில் வளரவிடதவன் நீன்னு பிரபல பதிப்பாளர்கள் எல்லோரும் சொல்லுரங்க. 

காப்பிகரான்: என்னமாதிரி டான்ஸ் ஆடுறவன் தமிழ் சினிமாவிலேயே கிடையாது தெரியுமா ? 

அந்நியன்:படத்தில நடிகிறதா டான்ஸ் ஆடுறதானு முதல படிச்சிக்க , நல்ல ஆடுவேன எதாவது டிவியில போய் போட்டிக்கு அடவேண்டியது தானே ? 

காப்பிகரான்:அங்க கால்லகட்டி தூக்கமாட்டங்க , படத்திலேன சும்மா ஆடு ஆடுன்னு ஆடுவேமில்ல ..

அந்நியன்: என்னடா படங்கள பறந்து பறந்து அடிக்கிற நீ என்ன சூப்பர்மேன ?

காப்பிகரான்: எங்க அப்பா சொல்லிருக்கரு; பொண்ண காப்பதற மாதிரி (கபடி)எல்லாம் படம் பண்ணினது போதும். இனி பண்ணுற  படங்கள்ல ஊர காப்பத்துறது (பறவை ), நாட்ட காப்பாத்துறது (மல்லு ) மாதிரிதான் இருக்கணும்னு.

அந்நியன்:  ஏன்டா அடுத்தவன் உழைப்ப  முழுசா காப்பிய அடிக்கிற படு ?

காப்பிகரான்: நீங்கதானே சொல்லியிருக்கிங்க. அஞ்சி பைசா திருடினாலும் அஞ்சி அஞ்சி பைசா திருடினாலும் ஒன்னுதான்னு. அதன் கொஞ்சம் காப்பி அடிச்சாலும் நிறைய காப்பியடிச்சாலும் காப்பிதானே ...

அந்நியன்: என்னடா சொல்ற, தெளிவா பேசுட; ஹிரோயின்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.

காப்பிகரான்:யாரோ எழுதிய புத்தகத்த பதிப்பாளர் காப்பியடிக்கிறாரு, அத காப்பியடிச்சி மேல்நாட்டுல படம் எடுக்குறாங்க, அத கொஞ்சம் மாத்தி இங்க பண்ணுரங்க அத தான் சென்னேன் .


அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள் நடிப்பா ????

யாரென தெரிகிறத- 2 சிறிய விளம்பர இடைவேளை பின்  தொடரும் ..

   "" உங்கள் மேல் குற்றம் இல்லாதவர் முதலில் கல் எறியட்டும் ""

"உன்கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலிருக்கும் தூசியைபார்"


நிகழ்ச்சி தொடர்கிறது....

அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள்  நடிப்பா ????

காப்பிகரான்: சமிபத்துல நான் நடிச்ச  சில படங்கள நல்ல நடிச்சிருக்கேன்  பாத்த தெரியும் (சிநேகிதன்,  காவல்காரன்,...)

அந்நியன்: கப்பியடிக்காத நடிக்கனும்ட  அது தான் உன்னோட படம் .

காப்பிகரான்: நீங்க ஒரு சட்டைய பாக்குறிங்க, அதேபோல புதுசா ஒரு சட்டை
தைக்கிறிங்க அது உங்க சட்டையா ? அடுத்தவன் சட்டையா ?

அந்நியன்: பண்ணுன தப்ப நியாயப்படுத்திறிய?

காப்பிகரான்: அப்படி பாத்த பாட்டை படம்கூட என்னோட ஏரியத்தான், காப்பியடிச்சவது படம்  ஓடனும் சார்  .

அந்நியன்: கருட புராணத்தின்படி நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே ...


காப்பிகரான்: இவ்வளவு பேசுற நீங்க முதல உங்களேட ஒர்ஜினல பாருங்க,
கண்ணு தெரியாம நடிச்சது(மலையாளம் மணி ) ,மூளைவளர்ச்சி  குன்றியவர  நடிச்சது(i sam ) ,அது பேரு காப்பிதானே ...


அந்நியன்: நான் அந்நியன் என்ன இந்த ஆட்டத்துல சேர்க்க கூடாது அது தப்பு
நீ போகலாம் ...

லைட் ஆப் 

  நேயர்களே யாரென தெரின்சிருப்பிங்க மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் ....

பி.கு : யாருமே புதுசா ஒன்னும் படைக்கல;  ஏற்கனவே இருக்கிற ஒன்னுலயிருந்து தான்  அடுத்தத உருவாக்குறங்க அல்லது கண்டுபுடிக்குறங்க  ...

அடுத்த சந்திப்பு : ACF ஆல் கடத்தப்பட்ட 15 பிரபலங்களுடன் ...