அலசல், புத்தகம், விமர்சனம்.

Showing posts with label சந்திப்-பு. Show all posts
Showing posts with label சந்திப்-பு. Show all posts

Saturday, 11 October 2014

அண்ணாச்சி என்னாச்சி ; அம்மா ஆட்சி


 "அண்ணாச்சி என்னாச்சி"

"என்னனு சொல்லுவேன்;ஆரம்ப காலத்தில தொழிலுக்கு புதுசு. அதன் மாட்டிகிட்டது, புடிச்சி உள்ளபோட்டபிறக்கும் தமிழ்நாட்ட விடாம ஆட்டுது."

"என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிறிங்க; கடைசி நடத்த எலைசன்ல கூட அமோக வெற்றி தான்னுங்களே "

"அதுதான் அண்ணாசி அம்மையாருக்கு ஆப்பா போச்சின்னு பேசிக்கிறாங்க, பிரதமர் ஆக ஆசைபட்டு முதல்வரும் போச்சி"

"பாவம் அண்ணாசி பொது மக்கள் பாடாய் படுறாங்க போக்குவரத்து பெரிசா பாதிக்குது."

"அது உண்மைதான் அண்ணாசி, ஆனா இப்ப கூட காட்சி காரங்க எலைசன் டைம் போல காசு செலவு பண்ணுறாங்களாம்."
 
"ஆமா அண்ணாசி கேள்ள்விபட்டேன், மொட்டை அடிச்ச 200ரூபா, ஊர்வலத்தில வந்த  100 ரூபா, உண்ணவிருததில கலத்துகிட்ட 500 ரூபா-னு  ஒரு லிஸ்றே வைச்சிருக்கன்களாம்."
 
"அது மட்டுமில்ல அண்ணாச்சி, இந்த தடவ பெரிசா பனிருக்காங்களாம்; தனியார் கல்வி நிறுவனக்கள மூட ஒரு ரேட்டு, தனியார் பஸ் நிறுத்த ஒரு ரேட்டுன்னு". 
 
"என்ன பண்ணியும் ஜமீன் கிடைக்கலையே ?"
 
"அது ஒண்ணுமில்ல அண்ணாச்சி  எதிர் தரப்பு தீர்ப்புல உறுத்திய இருக்காங்களாம்"
 
"இந்த சினிமா காரங்க சப்போர்ட் பண்ணுறதா தெரியுது, அதுவா நடிகிறவங்கனுக்கு சொல்லியா கொடுக்கணும், காசுதான் வாங்கமுடியாது. கடைசிவர கணக்கு  காட்டாம பணம் சம்பாதிக்கணும் இல்ல."
 
"இவங்க கலவரம் என்கிற பேருல பொது சொத்துகள நாசம் பண்ணுறத, ஆளும் கட்சின்னு யாரும் கேக்க மட்டேன்கிறான்களே ?"
 
"நீங்க வேற அண்ணாசி ஒரு போட்டவை கூட மாத்த பயருறாங்க அப்புறம் எப்படி கலவரத கட்டு படுத்துவாங்க; அதன் கூட்டம் கூடின ஊர்வலம்னு கிளம்பிருறாங்க"
 
"பொது சொத்துகள நாசம் பண்ற காட்சி ஏத இருத்தாலும்; அபராதம் விதிகணும்; கட்டலென்ன அடுத்த தேர்தல சம்மதபட்ட இடத்துல போட்டியிட தடைவிதிக்கணும்."
 
"இதெல்லாம் நடக்குங்களா அண்ணாசி; ஏதோ பொது மக்களுக்கு பாதிப்பு இல்லெனா  சரி, என்ன பண்ணியும் உபயெகம் இல்லாததால புதுசா பெட்டி மாத்திகிலாமுன்னு எதிர் தரப்போட பேசிகிறாங்களாம்."
 
"ஆமா அண்ணாச்சி கூடுதலா கொடச்சல் குடுத்த திகார் தான்னு கேள்வி பட்டாங்க போல; என்ன நடக்குமுன்னு பொறுத்திருந்து பாப்போம்."
 

Monday, 12 November 2012

ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன்

 எல்லோருமே திருடங்கதான் பதிவைதொடர்ந்து நிகழ்ச்சி வடிவில் அடுத்தபதிவு  ""ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன் "" இந்த பதிவில் பிரபல தமிழ் நடிகருடன் அந்நியன் நடத்திய கருடபுராண வதத்தை பதிவுசெய்கிறேன் .

  வணக்கம் நேயர்களே நம்முடைய யாரென தெரிகிறத நிகழ்சியின் புதிய பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன். இன்றைய நிகழ்சியில் அந்நியன் பிரபல நடிகரை காப்பியடித்த குற்றத்துக்காக கருடபுரனத்தின் படி  தண்டணை  வழங்க சந்தித்தபோது நடந்த  உரையாடலை உங்களுக்கு வழங்குகிறேன். 

"முந்தைய பதிவுகளை படித்தவர்களுக்கும்,பின்னுட்டம் தந்த பிரபல பதிவளர்களுக்கும் நன்றிகள் ..."


யாரென தெரிகிறத- 2

அந்நியன்: தமிழ் சினிமாவ வளரவிடாத குற்றத்திற்காக  கருட புராணத்தின்படி 100 தடவ நீ நடிச்ச படங்களா நீ பாக்கணும் ...

காப்பிகரான்: அண்ணா நான் யாருன்னு தெரியுமா ?

அந்நியன்: தெரியும்ட பாடு தமிழ்த்திரை படங்களை உலகஅளவில் வளரவிடதவன் நீன்னு பிரபல பதிப்பாளர்கள் எல்லோரும் சொல்லுரங்க. 

காப்பிகரான்: என்னமாதிரி டான்ஸ் ஆடுறவன் தமிழ் சினிமாவிலேயே கிடையாது தெரியுமா ? 

அந்நியன்:படத்தில நடிகிறதா டான்ஸ் ஆடுறதானு முதல படிச்சிக்க , நல்ல ஆடுவேன எதாவது டிவியில போய் போட்டிக்கு அடவேண்டியது தானே ? 

காப்பிகரான்:அங்க கால்லகட்டி தூக்கமாட்டங்க , படத்திலேன சும்மா ஆடு ஆடுன்னு ஆடுவேமில்ல ..

அந்நியன்: என்னடா படங்கள பறந்து பறந்து அடிக்கிற நீ என்ன சூப்பர்மேன ?

காப்பிகரான்: எங்க அப்பா சொல்லிருக்கரு; பொண்ண காப்பதற மாதிரி (கபடி)எல்லாம் படம் பண்ணினது போதும். இனி பண்ணுற  படங்கள்ல ஊர காப்பத்துறது (பறவை ), நாட்ட காப்பாத்துறது (மல்லு ) மாதிரிதான் இருக்கணும்னு.

அந்நியன்:  ஏன்டா அடுத்தவன் உழைப்ப  முழுசா காப்பிய அடிக்கிற படு ?

காப்பிகரான்: நீங்கதானே சொல்லியிருக்கிங்க. அஞ்சி பைசா திருடினாலும் அஞ்சி அஞ்சி பைசா திருடினாலும் ஒன்னுதான்னு. அதன் கொஞ்சம் காப்பி அடிச்சாலும் நிறைய காப்பியடிச்சாலும் காப்பிதானே ...

அந்நியன்: என்னடா சொல்ற, தெளிவா பேசுட; ஹிரோயின்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.

காப்பிகரான்:யாரோ எழுதிய புத்தகத்த பதிப்பாளர் காப்பியடிக்கிறாரு, அத காப்பியடிச்சி மேல்நாட்டுல படம் எடுக்குறாங்க, அத கொஞ்சம் மாத்தி இங்க பண்ணுரங்க அத தான் சென்னேன் .


அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள் நடிப்பா ????

யாரென தெரிகிறத- 2 சிறிய விளம்பர இடைவேளை பின்  தொடரும் ..

   "" உங்கள் மேல் குற்றம் இல்லாதவர் முதலில் கல் எறியட்டும் ""

"உன்கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலிருக்கும் தூசியைபார்"


நிகழ்ச்சி தொடர்கிறது....

அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள்  நடிப்பா ????

காப்பிகரான்: சமிபத்துல நான் நடிச்ச  சில படங்கள நல்ல நடிச்சிருக்கேன்  பாத்த தெரியும் (சிநேகிதன்,  காவல்காரன்,...)

அந்நியன்: கப்பியடிக்காத நடிக்கனும்ட  அது தான் உன்னோட படம் .

காப்பிகரான்: நீங்க ஒரு சட்டைய பாக்குறிங்க, அதேபோல புதுசா ஒரு சட்டை
தைக்கிறிங்க அது உங்க சட்டையா ? அடுத்தவன் சட்டையா ?

அந்நியன்: பண்ணுன தப்ப நியாயப்படுத்திறிய?

காப்பிகரான்: அப்படி பாத்த பாட்டை படம்கூட என்னோட ஏரியத்தான், காப்பியடிச்சவது படம்  ஓடனும் சார்  .

அந்நியன்: கருட புராணத்தின்படி நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே ...


காப்பிகரான்: இவ்வளவு பேசுற நீங்க முதல உங்களேட ஒர்ஜினல பாருங்க,
கண்ணு தெரியாம நடிச்சது(மலையாளம் மணி ) ,மூளைவளர்ச்சி  குன்றியவர  நடிச்சது(i sam ) ,அது பேரு காப்பிதானே ...


அந்நியன்: நான் அந்நியன் என்ன இந்த ஆட்டத்துல சேர்க்க கூடாது அது தப்பு
நீ போகலாம் ...

லைட் ஆப் 

  நேயர்களே யாரென தெரின்சிருப்பிங்க மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் ....

பி.கு : யாருமே புதுசா ஒன்னும் படைக்கல;  ஏற்கனவே இருக்கிற ஒன்னுலயிருந்து தான்  அடுத்தத உருவாக்குறங்க அல்லது கண்டுபுடிக்குறங்க  ...

அடுத்த சந்திப்பு : ACF ஆல் கடத்தப்பட்ட 15 பிரபலங்களுடன் ...

Wednesday, 5 September 2012

எல்லாருமே திருடங்கதான்

                                         
    இந்த பதிவு   எழுதநினைத்த போது முதலில் தோன்றிய  தலைப்பு
" உங்கள்மேல் குற்றம் இல்லாதவர் முதல்லில் கல்  எறியட்டும் " பின்பு  ஆன்மீக  வரியாக தோன்றியதால் மாற்றிவிட்டேன்  அலசநினைத்த கருத்தையும்  ஒரு நிகழ்ச்சி வடிவில் வளங்கியுள்ளேன்.            

(பின்னனியில் முதல்வன் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் )

  வணக்கம் நேயர்களே நம்முடைய "யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியின்
முதல் பதிவுக்கு அனைவரையும் வரவேற்க்கின்றேன் இன்று நாம் உரையாடயிருப்பது தமிழகத்தின் திருட்டுக்குடும்ப தலைவர் என மக்கள்
கருதும் மேதையுடன்.

                                                                          
புகழ்   :வணக்கம் ஐயா,
எக்ஸ்: வணக்கம் .

புகழ் :   ஐயா தமிழகத்திலேயே சிறந்த திருட்டுகுடும்பமாக உங்களை         தேர்ந்தெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறிங்க ?
எக்ஸ்: சந்தோசமா இருக்கு என்னோட வாரிசுங்க திருட்டுல உலகத்திலே முதலிடத்தில வருவாங்க.

புகழ் : ஆனா  நீங்க இப்போவிட்டுல இல்ல இருக்கிறிங்க இதுக்கு யாரு    காரணம் ?
எக்ஸ்:இந்த  கூத்து காரனுங்கதான் ஆப்பு வச்சுட்டானுங்க, ஒரு பாலம் கட்ட போய் ஒருத்தன் சீனுக்குள்ள வந்துட்டன் .

புகழ் : கூத்துல   கூடா உங்ககுடுப்பம் மத்தவங்கள  காசுபாக்க விடலயாமே ?
எக்ஸ்:தம்பி தெரியாம பேசக்கூடாது நானும்  கூத்துகட்டுனவந்தான் அப்புறம்
என்னோடபுள்ளங்க  கூத்து கட்டுன தப்ப?

புகழ் :தப்பில்லைங்க ஐயா ஆனா அடுத்தவன்  கூத்த ஓட விடமே பாண்டிக்காறதம்பி தட்டடிச்சாரமே ?
எக்ஸ்: கூத்து நல்லாயிருந்த ஓடும்,இன்னைக்கு  கூத்து  கூட   அடுத்தவனுங்ககிட்ட இருந்து களவாண்டு தான் எடுக்கிறான், இந்த குத்து கரபயலுங்க ஒழுங்க வருமான வரி  கூட கட்டுறதில்ல. கேட்ட கோட்டைக்கு
வர நிக்கிரானுங்க.

புகழ்:பக்கதுல நம்ம ஆளுங்களா கொன்னப்போ நிங்க பெருசா ஒன்னும் பண்ணலியே ?
எக்ஸ்: என்னால மரத்தடியில காத்து வாங்க தான் முடியும். அதுக்காக
சாகவா முடியும் ;அதன் இளவு நடந்தத மற(றை)க்க உலக நம்ம மாநாடு நடத்தினேனே போதாதா ?
அதுக்குமேலே என்னாலே ஒன்னும் மேலே சொல்ல முடியாது  அதுதான் சீனு...

புகழ் :"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியில் ஒரு  இடைவேளை


"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும்
ஒருக்கண்ணை மூடாதே "

"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சி தொடர்கிறது ...

புகழ் :ஐயா பாண்டியில பாறை களவாண்டிருகங்களே?
எக்ஸ்: நான் கொடுக்க வேண்டியது கொடுக்க சொன்னேன் கணக்கு தப்புல ஒரு போட்டி கொரன்சிடுச்சி அதான் புடிச்சிட்டானுங்க.

புகழ் :சமீபத்துல ஒரு  கூத்துகூட உங்கள பத்திதான் விமர்சிச்சிருக்காங்க?
எக்ஸ்: தம்பி இப்போ ஓடிட்டு இருக்க சீனு கூட என்ன பத்தினதுதான்
விமர்சிக்கிரவனுக்கு வேற வேலையில்ல , நீங்க சொன்ன   கூத்து  ஒரு மொக்க  கூத்து. பாக்க போனவங்கள நல்ல ஏமாத்தி காசுபாத்தானுங்க .

புகழ் :அடுத்தது என்ன செய்ய போறிங்க ?
எக்ஸ்: கல்ல நிரப்புது போல தெரியிது அடுத்த சீசணுல யப்படியாவது கோட்டைக்கு போகணும்.

புகழ் : கோட்டையில இருந்தப்போ முடியலேன்னு துனை வச்சீங்க இப்போ நல்ல தானே இருக்கிறிங்க ?
எக்ஸ்:அது தான்  சீனு முதல்ல கேமராவ ஆப்பண்ணுய....

புகழ் :நேயர்களே ஐயா சொன்னதாலே இன்றைய நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்திட்டோம்.
இன்றய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற  (எக்ஸ்)  "யாரேன தெரிகிறத" உடனே தெரின்சிக்கணும்.... ம்ம்ம்....

மீண்டும் அடுத்த திருடரை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் புகழ் ....
                           
பி .கு:இங்கு குறிப்பிட்டுள்ள எக்ஸ் மட்டும்  அல்ல நாம்  எல்லாருமே திருடங்கதான் ...

அடுத்த சந்திப்பு : கூத்துக்காரன் தளபதி ......