அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday 30 September 2012

காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...

   இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும்   பிறத்தது முதல்  தன்  உயிரை காத்து கொள்ள போராடுகிறான்..     அவனை  மனதளவில்    கொல்ல பணப்பேயிகள்  நடமாடி கொண்டே  இருக்கின்றன. அவைகளிடமிருந்து   மக்களை காப்பாத்த யாருமே இல்லையா மை லாட் (நீதி) 

  மனிதன் மனதளவில் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்புக்கு  உள்ளாகிறான்.
மனதழுத்ததினுடனே நோயாளி ஆக்கப்பட்டு சாகடிக்க படுகிறான். 

  மருத்துவமனைகள் மனிதனை நோயாளி ஆக்குவதில் முக்கியபங்கு வகிக்கின்றது, மருத்துவமனைகள் மனிதனின் நோயை அதிகபடுத்தி காசுப்பார்க்க துடிக்கின்றன. மருத்துவமனைக்கு போகும் மனிதர்களை மணிகணக்கில் காக்கவைத்து மனழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.
தங்களின் சுயலாபத்திர்க்காக மருந்துகளை எழுதிக்குவிக்கின்றனர் . 

       பல பொது பணியிடங்களில்  வேலை   செய்யும்   அரசு       மற்றும் தனியார்  
ஊழியர்கள்    சாதாரண மக்களின்           உணர்வுகளுக்கு    மதிப்பளிப்பதில்லை 
வாசகபலகைகளில் மட்டுமே மதிப்பு உள்ளது. 


  அரசு ஊழியர்களின் அலச்சியத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பாடுவது 
வாடிக்கையாகிவிட்டது.  பேருந்துகளில் பயணிப்பவர்கள் நடத்துனர்களும் ஓட்டுனர்களும் அவமதிக்கப்படுகின்றனர். அரசு வேலை என்பது அரசினுடைய வேலையாள்; அரசு என்பது மக்கள் என்பதை மறந்து அதிகார கர்வத்துடன் மக்களை மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து போராட அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சாதாரண மனிதர்களிடையே வலிமையிருப்பதில்லை.மனித உரிமைகள் சாதாரண மக்களுக்கு மறுக்கபடுகிறது.

   இன்றைய ஆட்சி நிலையை  பார்த்தால் மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் என்ற அறிக்கை வாசிக்கும் ஆட்சியாகவே உள்ளது. உயிருடன் இருப்பவனுக்கு பாதுகாப்பில்லை இறந்துவிடுங்கள் பணம் தருகிறோம் என்ற நிலையில் ஆட்சி. நடந்துவரும் விபத்துக்களும் இதையே   உணர்த்துகின்றன... 


 மக்களை கொன்று குவித்தவனுக்கும்,கொல்ல நினைப்பவனுக்கும் மனிதவுரிமையும்,சட்டமும் துணைநிர்க்கின்றது. சாதாரண மக்கள் வாழ்வதற்க்கான உரிமைக்கூட பணத்தாசை பிடித்த கயவர்களால் மறுக்கபடுகிறது.

  நாமும் சொல்லுகிறோம் நாம்நாடு சுகந்திரம் அடைத்துவிட்டது,
மக்களாட்சி  நடைபெறுகிறது  என்று உண்மை உலகறியும் தமிழகத்திலேயே தமிழன் வதைக்கபடுகிறான்....காப்பாத்துங்க மை லாட்  கொல்ல பாக்குறாங்க...

  கல்வி விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகவே மாறிவிட்டது .

  ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளகக்கொண்டு மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் செயல்ப்பட்டுவருகின்றனர் .அன்னிய முதலிடுகளை அனுமதித்து மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கின்றனர் .தன்னை தானே காத்துக்கொள்ளும் வலிமைபடைத்தவன் மட்டுமே  கயவர்களை எதிர்த்து வாழ முடிகிறது ...

இயலாதவனுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை இல்லாதவனுக்கும் கொடுத்து; இருப்பவனையும் இல்லாதவனக்கி விட்டனர் .



Wednesday 5 September 2012

எல்லாருமே திருடங்கதான்

                                         
    இந்த பதிவு   எழுதநினைத்த போது முதலில் தோன்றிய  தலைப்பு
" உங்கள்மேல் குற்றம் இல்லாதவர் முதல்லில் கல்  எறியட்டும் " பின்பு  ஆன்மீக  வரியாக தோன்றியதால் மாற்றிவிட்டேன்  அலசநினைத்த கருத்தையும்  ஒரு நிகழ்ச்சி வடிவில் வளங்கியுள்ளேன்.            

(பின்னனியில் முதல்வன் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் )

  வணக்கம் நேயர்களே நம்முடைய "யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியின்
முதல் பதிவுக்கு அனைவரையும் வரவேற்க்கின்றேன் இன்று நாம் உரையாடயிருப்பது தமிழகத்தின் திருட்டுக்குடும்ப தலைவர் என மக்கள்
கருதும் மேதையுடன்.

                                                                          
புகழ்   :வணக்கம் ஐயா,
எக்ஸ்: வணக்கம் .

புகழ் :   ஐயா தமிழகத்திலேயே சிறந்த திருட்டுகுடும்பமாக உங்களை         தேர்ந்தெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறிங்க ?
எக்ஸ்: சந்தோசமா இருக்கு என்னோட வாரிசுங்க திருட்டுல உலகத்திலே முதலிடத்தில வருவாங்க.

புகழ் : ஆனா  நீங்க இப்போவிட்டுல இல்ல இருக்கிறிங்க இதுக்கு யாரு    காரணம் ?
எக்ஸ்:இந்த  கூத்து காரனுங்கதான் ஆப்பு வச்சுட்டானுங்க, ஒரு பாலம் கட்ட போய் ஒருத்தன் சீனுக்குள்ள வந்துட்டன் .

புகழ் : கூத்துல   கூடா உங்ககுடுப்பம் மத்தவங்கள  காசுபாக்க விடலயாமே ?
எக்ஸ்:தம்பி தெரியாம பேசக்கூடாது நானும்  கூத்துகட்டுனவந்தான் அப்புறம்
என்னோடபுள்ளங்க  கூத்து கட்டுன தப்ப?

புகழ் :தப்பில்லைங்க ஐயா ஆனா அடுத்தவன்  கூத்த ஓட விடமே பாண்டிக்காறதம்பி தட்டடிச்சாரமே ?
எக்ஸ்: கூத்து நல்லாயிருந்த ஓடும்,இன்னைக்கு  கூத்து  கூட   அடுத்தவனுங்ககிட்ட இருந்து களவாண்டு தான் எடுக்கிறான், இந்த குத்து கரபயலுங்க ஒழுங்க வருமான வரி  கூட கட்டுறதில்ல. கேட்ட கோட்டைக்கு
வர நிக்கிரானுங்க.

புகழ்:பக்கதுல நம்ம ஆளுங்களா கொன்னப்போ நிங்க பெருசா ஒன்னும் பண்ணலியே ?
எக்ஸ்: என்னால மரத்தடியில காத்து வாங்க தான் முடியும். அதுக்காக
சாகவா முடியும் ;அதன் இளவு நடந்தத மற(றை)க்க உலக நம்ம மாநாடு நடத்தினேனே போதாதா ?
அதுக்குமேலே என்னாலே ஒன்னும் மேலே சொல்ல முடியாது  அதுதான் சீனு...

புகழ் :"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியில் ஒரு  இடைவேளை


"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும்
ஒருக்கண்ணை மூடாதே "

"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சி தொடர்கிறது ...

புகழ் :ஐயா பாண்டியில பாறை களவாண்டிருகங்களே?
எக்ஸ்: நான் கொடுக்க வேண்டியது கொடுக்க சொன்னேன் கணக்கு தப்புல ஒரு போட்டி கொரன்சிடுச்சி அதான் புடிச்சிட்டானுங்க.

புகழ் :சமீபத்துல ஒரு  கூத்துகூட உங்கள பத்திதான் விமர்சிச்சிருக்காங்க?
எக்ஸ்: தம்பி இப்போ ஓடிட்டு இருக்க சீனு கூட என்ன பத்தினதுதான்
விமர்சிக்கிரவனுக்கு வேற வேலையில்ல , நீங்க சொன்ன   கூத்து  ஒரு மொக்க  கூத்து. பாக்க போனவங்கள நல்ல ஏமாத்தி காசுபாத்தானுங்க .

புகழ் :அடுத்தது என்ன செய்ய போறிங்க ?
எக்ஸ்: கல்ல நிரப்புது போல தெரியிது அடுத்த சீசணுல யப்படியாவது கோட்டைக்கு போகணும்.

புகழ் : கோட்டையில இருந்தப்போ முடியலேன்னு துனை வச்சீங்க இப்போ நல்ல தானே இருக்கிறிங்க ?
எக்ஸ்:அது தான்  சீனு முதல்ல கேமராவ ஆப்பண்ணுய....

புகழ் :நேயர்களே ஐயா சொன்னதாலே இன்றைய நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்திட்டோம்.
இன்றய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற  (எக்ஸ்)  "யாரேன தெரிகிறத" உடனே தெரின்சிக்கணும்.... ம்ம்ம்....

மீண்டும் அடுத்த திருடரை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் புகழ் ....
                           
பி .கு:இங்கு குறிப்பிட்டுள்ள எக்ஸ் மட்டும்  அல்ல நாம்  எல்லாருமே திருடங்கதான் ...

அடுத்த சந்திப்பு : கூத்துக்காரன் தளபதி ......