அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday, 19 July 2014

கண்மூடி திறக்கும் போது ...


                                                                          கண் 
மனிதனின் விடியல்; மனிதன்  உலகை காண படைக்க  பட்ட  உறுப்பு இரவு பகல் மாறுபாட்டை மனிதனிக்கு காட்டுவது. நிறம் என்ற ஒன்றே கண்ணிருப்ப்பதால் தான். ஒரு நிமிடம் நமக்கு கண்ணில்லை எனில்! உலகமே இருண்டுவிடும்நமக்கு. "ஒரேநிறம்"  கண்ணிருக்கும் நாம் அதற்கிட்ட பெயர் கருப்பு. கண்ணில்லாத வர்களுக்கு அதுவே உலகம்.



   உலகை காணும் விளக்கான கண் மண்ணில் புதைக்க படுவதை  விட  மனிதரில் விதைக்க படலமே,. மனிதன் இறந்தபின்னும் மனிதனின் புகழ் நிலைத்திருக்கும், ஆனால் மனிதனே இவ்வுலகை காண்பதற்கு மனிதனின்  கண்களுக்கு மனிதனே வாழ்நாளில் வழி வகுத்துவிடுவாயா....? 

  மின்விலகில்லாமல் சிலமணிநேரங்கள் கூட நம்மால் பொருத்து கொள்ள முடிவதில்லை ஆனால் வாழ்நாள் முழுவாதுமே விடியலே கண்டிராத மனங்கள் நம் கண் மூடுபொதாவது திறக்க செய்யலாமே! விழிதிறந்து வைக்கும் நம்-புகழ் விண்ணையே தாண்டி நிற்கும் .


காதுகளை கண்ணாகி, உணர்வுகளில் உருவம் தேடும் மனிதருக்குகண்ணிருக்கும் நம்மைவிட  விழிப்பு அதிகம்; ஆனால் விடியால் இல்லை.இறந்தபின்னும்  விழித்திருப்போம். விழி மூடி விளிதேளுவோம். கண்மூடி திறக்கும்போது; நம் கண்கள் நம்மைய கடவுள் என்கும். மனம் கணிதிடுங்கள் மனிதனும் கடவுளாகலாம்.......



Monday, 16 June 2014

வருவதற்கு முன் பொம்மைபடம்; வந்தபின் புதுமை படம்

"வருவதற்கு முன் பொம்மைபடம் வந்தபின் புதுமை படம்", கோச்சடையன் படம்  சாதித்திருப்பது  இதுதான். 


சாதாரண அனிமேஷன் படமாக கருதப்பட்ட இந்தப்படம், வருக்கால தொழில்நுட்பத்தின் பாதையாக அமைத்துள்ளது. படத்தை ஒருமுறையாவது பார்க்காதவர்கள் இல்லை.
இந்திய சினிமாவின் பரிமாணமாறுதலில் மயில் கல்லாக இருக்கபோகும் படம். ஆரம்பத்தில் அனிமேசன் உணர்வு மனதை விட்டு மாற மறுத்தாலும்; ரஜினி அதை சரிசெய்துவிடுகிறார். 

படத்தில் குறைகள் உள்ளன . இருப்புனும் நிறைகளை பட்டியலிட வெடியதருணமிது .

* ரஜினி இது ஒரு நடிக்கரின் பேரல்ல சினிமாவின் ஒரு ப்ப்ரண்ட்  , இந்தியவை தாண்டி இந்த ப்ரண்ட் விற்பனை ஆகும்.

*நாகேஷ் கதாபத்திரம் வருங்கலத்தில் மறந்த நட்சத்திரங்கள்  கதாபத்திரங்கள் ஆக போவதை உறுதிபடுத்துகிறது. (ராஜமொலி ஒரு பாடலில் NTR யை ஆடவைத்திருந்தார்)

*இசையில் A .R  தவறவிடவில்லை அது போர்காட்சிகளில் தெரிகிறது. அனிமெசன்படதில் பாடல்களா ! சரியாக பயன்படுத்தபடுகிறது.

*Lord of the rings படத்தில் கையாளபாடுவதைபோல் அனிமேஷன் விலங்குகள் 3D யில் பிரமிக்க வைக்கின்றன.


Monday, 26 May 2014

அசத்தியது அ .தி.மு. க !!!..

   மதவாத கட்சியாக கடந்த சில தேர்தல்களில் ஓரங்கட்ட பட்ட பாரதிய ஜனதா கட்சி தனக்கென்று ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

  அதை போலவே விஜயகாந்த் தன் ரசிகர்களிடத்திலிருந்து ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பதும் உண்மை . இன்றைய தமிழக அரசியலில் புதிதாக முளைத்த கட்சியாக ஓரங்கட்ட படாத அளவுக்கு ( தே. மு. தி. க) வரவு உள்ளது.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் (தி மு க ) வின் பயங்கரமான பிரச்சாரத்தை மீறி
புதிய கட்சியின் மேல்(ரசிகர் அல்லாதா   மக்கள் நம்பிக்கை கொண்டனர் ).
(தி. மு க )வின் அம்புகள் ஏனோ (தே  மு தி க ) வை  பெருமளவு துளைக்கவில்லை.

ஆனால் ;
இந்த யூகங்கள்  எல்லாம் கன்னியாகுமரியை தவிர எங்கும் பலிக்கவில்லை.

அசத்திவிட்டது  அ .தி.மு. க !!!..

Monday, 14 April 2014

வர+தட்சணை =வரதட்சணை வாங்கலாம் !



திருமணங்கள் செர்க்கதில் அல்ல ரோக்கதில் நிச்சயக்க படுகிறது. என்ற பெண்விட்டாரின் குற்ற சாட்டு நியாமற்றது. காரணம் இன்று திருமணங்கள் வெறும் மன பொருத்தத்தை மட்டும் பார்த்து நடப்பதில்லை ; இங்கு பார்க்கப்படும் பல்வேறு பொருத்ததில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதில் தவறில்லை காரணம், வாழ்க்கை என்ற வண்டிக்கு  பணம் என்ற எரிபொருள் அவசியமானது.

ஆண் -பெண்  இருவரும் பணிக்கும் வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு தங்களது இருவரது வருமானம் சம  சரியாக  கலப்பதில் தவறில்லை.  ஆண்  பெண்ணுக்கு நிகராக கருதப்படும்போது. தான் படித்த படிப்பு, அழகு , குடும்ப பாரம்பரியம் என்று பார்க்கும் பொருத்ததில் பணமும் சேர்க்கபடுகிறது. 


பெண் விட்டாருக்கு வர தட்சணை கொடுக்கவேண்டும் என்ற பெண் புரட்சியின் வாதம் சற்று உற்று நோக்க வேண்டியது, இங்கு  பெண்கள்  விலை பொருளா  என்ன  ?

பெண்வீட்டர்  பார்க்கும் ஆணின் பொருளாதாரத்தையே ஆண்வீட்டரும் பார்க்கின்றனர். இங்கு கட்டாய படுத்துவதை வேண்டுமானால் தவறேன்கலாம். ஆனால் கமிட் மெண்ட் ஆகவே அரேஞ்சி மேரேஜ் உள்ளது.





Saturday, 22 March 2014

இரண்டாம் உலகம் ரிட்டன்ஸ்

    செல்வராகவன் படங்களில் இரண்டாம் உலகம் படம் கற்பனை வழம் குன்றி காணப்பட்டது. நல்ல கதை கரு  அதில் பழைய கால அரச வாழ்க்கையே மேலோங்கி இருந்தது. புதுமையான உலகம் சற்று சறுக்கிவிட்டது. என் கற்பனையை அந்த கதை கருவில் தூவி விட்டுபார்கிறேன். " இரண்டாம் உலகம்    ரிட்டன்ஸ் "



நமது  உலகத்தில் உள்ளது போல் அங்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது.
மனிதர்கள் ஒரே தரம் உயர்ந்தவன் தலைவன் இல்லை. சிலவித்தியசமான நாட்களில் பிறக்கும் அபூர்வ குழந்தைகளை கொன்றுவிடுகின்றனர். மற்ற படி அவர்களுக்குள் எந்த ஒருமைப்பாடும் இல்லை. மனம் போல் வாழ்க்கை.

அவர்களின் சபகேட்டில் முக்கியமானது. தூங்கி விழிக்கும்போது முந்தய தினம் நடந்த சம்பவங்கள் மனதில் நிலைப்பதில்லை.

அங்கு பிறக்கும் ஏழு மனித தன்மைபடைத்த அபூர்வங்கள் அவர்களுக்கு கடவுளாக நினைக்கிறார்கள். 

மனிதன் வெற்றி பெற்றான ? அபூர்வ பிறப்பை இனம் கண்டு அளித்தார்களா என்பது முடுவு .
தொடரும் ...

Tuesday, 25 February 2014

தவிர்க்கப்பட வேண்டிய பாடல்கள்

                                                 
தமிழ் திரை உலகம் இன்றைய நிலையில் வியாபார நோக்கமாக வளர்ந்து வருகிறது,  இந்தி திரையுலகை ஒப்பிடுகையில்திரைபடத்தின் விளம்பர உத்தியினால்  நூறு கொடிகளில் கணக்கு வருகிறது.   தமிழ் திரையுலகமும் அதையே பின்பற்ற நினைக்கிறது. படத்திற்கு தேவை பட பாடல்களை திணித்து படத்தின் வேகத்தை குறைகிறது.

                                                           

   மலையாள திரைஉலகில் சமீபகாலமாக வரும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.  இவைகளில் இருக்கும் ஒற்றுமை புதிய தலைமுறைகளின் பங்கேற்பினால் புதுமையான திரை கதை அமைப்பு. இதற்கு முக்கிய காரணங்களை பார்த்தால்;


                                                                              



    முக்கிய சில திரைப்படங்களில்  பாடல்களின் எண்ணிக்கை குறிப்பிடும் வகையில் உள்ளது. கதைக்கு தேவையில்லாத எந்த பாடலும் காண்பதில்லை . இவற்றில் பல படங்கள் தமிழுக்கு கொண்டுவரபடுகிறது, ஆனால் அதில்கூட பாடல்கள் திணிக்கபடுகிறது . படங்களின் வெற்றியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

                                    


இனிமேல் வரவிருக்கும் படங்களிலாவது பாடல்கள் குறைந்தால் திரைக்கதை வேகம் அதிகரிக்கும். சமிபத்தில் சாதித்த மலையாள படங்கள்.



Friday, 24 January 2014

ட்ரை ஒரு செயல் படாத அமைப்பா ?


   ட்ரை  இந்தியாவில் தொலைதொடர்பு குற்றங்களை குறைப்பதற்காக அரசால் இயக்கப்படும் அமைப்பு; இது இன்று இயங்குகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது .


 "மொபைல்நம்பர் போர்டப்ளிட்டி"பிரச்சினை அதில் முதன்மையானது. தொலைதொடர்பு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய சேவை நிறுவனத்தை மாற்ற நினைக்கும் மக்களின்  ஒரு சதவீதம் கூட அந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா என்பது சந்தேகமே!


  மக்களின் போர்டபில் முயற்ச்சி பலனளிக்காமல்          இழுத்தடிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதன் பின்னால் மாதகணக்கில் அலைய முடியாதவர்கள், தொடர்ந்து தங்களுடைய பழைய நிறுவனத்தின் அக்கிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். பதினைத்து நாட்களில் "போர்ட் கோடு" என்னவோ காலாவதி ஆகிவிடுகிறது. பயனாளிகளின் பிரச்சினை காலம்  கடந்து வருகிறது. 

போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்; தவறான போர்ட்கோடு, வாடிக்கையாளர் மறுபரிசிலனை, போர்ட் கோடு காலாவதியாகி விட்டது, தங்களின் புதிய சேவை நிறுவனத்தில் பிரச்சினை;  என்று நீள்கிறது ....

ட்ரை  செயல்படுமா ???


Monday, 30 December 2013

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள் :


சிறந்த இயக்குனர்  -  பாலா (பரதேசி )

வெற்றி நாயகன்  -  சிவகார்த்திகையேன் (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நீச்சல் )

கனவுக்கன்னி  ​ -நஸ்ரியா  (நேரம், ராஜாராணி ,நையாண்டி )

சிறந்த இசை - G .V  பிரகாஷ் குமார் (பரதேசி, ராஜாராணி, உதயம் NH 47,..)

நகைசுவை முத்திரை - சூரி (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம்,நையாண்டி,...)



Monday, 25 November 2013

கலைக்குடும்பத்தின் கத்திப்படங்கள்

கத்திப்படங்களின் எண்ணிக்கை தமிழ்த்திரையில் அதிகரித்துவிட்டது, காமெடியில்  தொடங்கி ஆக்சன் வரை வந்துவிட்டது ......






Saturday, 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

Monday, 30 September 2013

சுசிந்திரன் சொன்ன காதல் கதை ...


திரைப்பட தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு "ஆதலால் காதல் செய்வீர்" ஒரு சிறந்த உதாரணம் .




படம் பார்க்குமுன் படத்தின் தலைப்பு ஒருவித காதல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது. படம்பார்த்தபிறகு  படத்தின் தலைப்பு இயக்குனரின் ஆளுமையை மனதுக்குள் பதிக்கிறது .
நாடோடிகளில் உறுதியற்ற காதலால் நண்பர்களின் பதிப்பை பார்த்த நமக்கு
அதே காதலால் குழந்தைகளின் ஏக்கத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் கடைசி ஆறு நிமிடங்களில் யதார்த்த படுத்தியள்ளர் இயக்குனர் .

Tuesday, 27 August 2013

விழியில் விழுந்தவள்






உன்மொழி தேவையில்லை விழிமொழி போதுமடி;
உன்பார்வை படும் ஒவ்வொருமுறையும் புதிதாய் பிறதேனடி ,
சகா வரம் தந்தயடி, செத்து செத்து பிளைகிறேனடி....

Friday, 26 July 2013

பாட்டு குதிரடா ... பட்டு குதிரடா...

காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா
நெஞ்சம் வேறுட அதில் வஞ்சம் நூறுட
காதல் காட்டி காட்டியே இங்க கூத்தடிகிறண்டா

காசு ஆறுட அந்த காலம் வேறுட
கண்ணா மூடித்தான் இங்க களவுனடத்துடா
நேசமில்லட  ஊரில்   பாசமில்லட
வேஷம் போட்டுதான் இங்க வாழ்க ஓட்டுடா
டப்பு உண்டுன்னா  இங்க மப்பு காணுண்ட
மனசமாத்தி தான் அது மாய காட்டுண்டா


காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா


பூவிருகுதட அதில் தேனிருக்குதட
தேடி  போனாதான் முள்ளிருகுதடா
குருவி இல்லடா  இங்க குப்பயுண்டுட
மன ஊடலில்லட சரி கூடலுண்டுடா


காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா


குப்பதொட்டிட அதில்  சப்பு கொட்டுண்ட
கூடிவந்து குட்டி எல்லாம் கூத்து கட்டுண்டா


                                                                                                                                        Teamwork 

                                                                  city chance 

Saturday, 22 June 2013

கொள்ளையர்களின் சங்கிலி




   வியாபாரம் என்பது ஏமாற்றுவதுதான்; வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதுதான்  வியாபாரிகளுக்கு இலாபம் தரும், ஆனால் ஏமாற்றுவதை வியாபாரமாக்கி அடித்தட்டு மக்களை ஆசை காட்டி மேஷம் செய்யும் தந்திரமே கொள்ளையர்களின்  சங்கிலி.


  இந்த சங்கிலிதொடர் கொள்ளையில் இணைக்கபடுவது நம்முடைய நண்பர்களின் மூலமே. பல வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்ட இந்த திட்டம். காலத்திற்கு ஏற்றபடி பல பரிமாணங்களை எடுத்து வருகிறது.எந்த பரிமாணமாக இருந்தாலும் ஒரே இலக்கைத்தான் முன்வைக்கும்  "குறிகிய காலத்தில் கோடிஸ்வரன் ".

  பத்து வருடங்களுக்கு முன் முதல்முறையாக என்னை சந்தித்த இந்த சங்கிலி அதன்பின் பல பரிமாணங்களாக என்னை சந்தித்துவருகிறது. இதில் எமாறுபவபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நான் பார்த்த இந்த கொள்ளை சங்கிலியின் சில பரிமாணங்களை இங்கு பகிர்கிறேன்.

1997
உறுப்பினராக  2,000 k 

வீட்டு உபயோக பொருள்களின் பரிமாணத்தில் இந்த கொள்ளை சங்கிலியை முதலில் சந்தித்தேன் .

  2000 ரூபாய் கொடுத்து சங்கிலியில் இருக்கும் ஒருவரின் கீழ்   உறுப்பினர் ஆக வேண்டும். அவர் நமக்கு இரண்டு  வீட்டு உபயோக பொருள் விற்பதற்க்காக  கொடுப்பார். அதை விற்கவேண்டும். வாங்கும் நபரை மூளை சலவை செய்து நமக்கு கீழ்  இரண்டு நபர்களாக சேர்க்க வேண்டும். அப்போது நாம் முதலில் கொடுத்த 2000 ரூபாயில் பாதி அதாவது 1000 நமக்கு கிடைத்துவிடும். அவர்களும் இதைபோல் செய்யும் போது நமக்கு கீழ் 6 நபர்கள் வருவார்கள் .

  இங்கு முதல் காட்ட படுவது மட்டுமே வியாபாரம் அதன் பின் மற்றவர்களை மூளை சலவை செய்து எப்படி  நமக்கு கீழ் இணைப்பது,  நாம் எப்படி பணம் சேர்ப்பது என்ற களவுபடம்தான்.


மூளை சலவை செய்வதற்காக  கையாளப்படும் விதிகள்:

1.மிகுந்த மரியாதையுடன் அழைப்பது.
(சார் ,ஜி ,.....)

2.ஆடையில் ஒரு உயர்தர மாயையை ஏற்ப்படுத்துவது .
(டை அணிவது, சூ அணிவது ,...)

3.தான் வேகமாக வளர்வதாக பொலி ஆவணம் கட்டுவது.
(பேங்க் இருப்புத்தொகை, விலையுயர்ந்த பொருள்களின் உரிமை,...)

4.இடைவிடாமல் புன்கையுடன் பேசுவது.

5.சிந்திக்கவிடாமல் காய் நகர்த்துவது.
(போசும் போது அவர்களின் சிந்தனைகளை உகிப்பது )

6.பணத்தாசை உக்குவிப்பது.
(அடுத்தவர்களுடன்  ஒப்பிட்டுவது  )

கொள்ளை சங்கிலியின் சூத்திரம்:   50%

                                                                  A   +2000+4000+4k 

                               B - 2000 +2000+ 2k                                         C     -2000+2000+2k 


       1b -2000+1k                       2b -2000+1k                   1c-2000+1k                      2c -2000+1k 


1ba -2k          1bb  -2k          2ba -2k        2bb-2k         1ca-2k         1cb -2k       2ca-2k        2cb-2k


1ba  to A +500  ;(1ba+1bb+2ba+2bb+1ca+1cb+2ca+2cb) =4k
1ba to  B +500  ;(ba+1bb+2ba+2bb)= 2k
1ba to  1b+500 ;(ba+1bb)=1k                             
                                                                                                                     to be continued.....

சூத்திரம் ஒன்றுதான் காலத்திற்கேற்ப ஆரம்ப பரிமானம்தான் மாறுபடுகிறது.

2000   
ஆன்லைன் கொள்முதல்
உறுப்பினராக  4,000 k 

2005
பெண்களின் அலங்கார பொருள்கள் (லிப் ஸ்டிக்,... )
உறுப்பினராக  5,000 k  

2007
கல்வி புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி 
உறுப்பினராக  6,000 k

2010
ஹெல்த் போர்டின் பவுடர்ஸ் 
உறுப்பினராக  8,000 k  

2012
பிஸ்னஸ்மேன்
உறுப்பினராக   10,000 k 

 பாதிக்க பட்டவர்கள் ஏராளம் ......

Sunday, 26 May 2013

திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 4

    பல கதைகருகள் மனதில் உதித்தபோதும் அதை திரைகதை ஆக்குவதில் இயலாமை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த கதைகளின் சாயல் பின்னாளில் வரும்படங்களில் தெரிகிறது. அதுபோலவே சில திரைகதை யுத்திகளும். அப்படி மனதில் பட்ட ஒருகதையை திரைகதை ஆக்கி பார்க்கலாம் என்று முயற்சிக்கிறேன். கதையமைப்பில் பல பட தாக்கங்கள் தெரியலாம்.  

தலைமுறை

                answer me

கதைகரு :

"எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே ..."

கதைசுருக்கம்:

     நமது இந்திய சட்டபடி பதினெட்டு வயதுக்கு குறைவான மனிதன் குற்றம் புரியும்போது தண்டஇலிருந்து தப்பிக்க வயதே காரணமாகிறது. அப்படி பட்ட பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள் இன்றயநிலையில் செய்யும் தவறுகள் மிகபோரியபதிப்பை ஏற்படுத்துகின்றன.

தொழினுட்பத்தின் உதவியுடன் இவர்கள் செய்யும் அக்கிரம்க்களால் பதிக்கபடுவபவர்கள் ஏராளம், இதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்பம் கருதபடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, தொழினுட்பம் இல்லது காலத்தில் கண்டுபிடிக்கபட்ட கத்தி எப்படி நன்மையையும், தீமையும் தருகிறதோ; அதுபோலவே இந்த புதிய தொழில் நுட்பங்களும். ஆகையால் தொழினுப்பத்தின் மேல் பழியை போட்டு  பெற்றோர்கள் தப்பித்து கொள்ள வேண்டாம்.

ஒரே தலைமுறையை இரு கூட்ட நண்பர்கள் அவரவர் விரும்பிய படி வாழமுயல்கின்றனர். அவர்களின் வயது பதினெட்டை எட்டவில்லை......

திரைகதை:


ஆரம்பக்காட்சி
-  துக்கில் தொகிய  கல்லுரிமாணவி.-

(இருண்ட அறை தூக்கில் தொங்குவாதொங்குவதற்காக  தயாராகும் ஒரு இளம்பெண். கல்லுரி சீருடை அணிதிருக்கிறாள் .)

அங்கும் இங்கும் நகரும் மாணவி, கையில் தென்பட்ட  தன்  துப்பட்டாவில் கவனம் செலுத்த ---
(மூன்று புகைப்பட  கோணங்கள் ) -
1.துப்பட்டாவில் முடிச்சி பின்னுதல்
2 துப்பட்டாவை மின்விசிரியுடன் இணைதல்
3 துக்கில் தொகிய இளம்பெண்  உடல்

தலைப்புகட்சிகள் :

செய்தி தாளில் செய்திகள் துக்கில் தொகின்னாள் கல்லுரிமாணவி காதல் தோல்வியா போலிஸ் விசாரணை .
*பழைய செய்திதாள்  செய்தி தலைப்பாகிறது*


வருடங்கள் மாறுவதும்  குற்றங்களின் தலைமுறை மாறுவதும் தலைப்பு காட்சியில்  செய்தித்தாள் செய்தியாக  வந்துபோகிறது )


நடிகையின் ஆபாச படம் இண்டர்நெடில் மாபின் செய்யபட்டதா
பயோ ஆயுத்தம் தயாரித்த மாணவன் கைது.

                                                             தொடரும்....




இப்படியும் வைக்கலாம் திரைப்பட தலைப்பு :

குற்றம் புரிந்தவன் ....,வைரம்....,சரண் ....,
கர்ஜனை .....,வதம் ......,பூரட்டாசி ...., அழகே ....,விழியில்  விழுந்தவள் ....,
அன்பானவள்... ஆயிரம்புஷ்பம்....., கடகம் ....,வக்கிரம்...,கேம் பாள் .....,
தக்காணம்...,


பன்ச் கண்ணா பன்ச் :
 "ஆம்பளனு காட்ட குழந்த பெத்துகிரிய, நீ ஆம்பளன அத வளதுகட்டனும்."

"ஆறுவயசிலையே அம்பானினு நினைகிறிங்க, ஆறு வயசில அம்ப்பானி யாருன்னு நினைகிறிங்களா "

"எப்படியும் வாழ்ந்துகோ உன்வாழ்க்கைய என் வாழ்க்கைல இல்ல ."


குறிப்பு: "அறிந்ததை எழுதுவதில்லை, அறிந்து கொள்ளுவதர்க்காக எழுதுவது
ஒருவருடத்தில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையடன் ...."





Sunday, 21 April 2013

திரையுலகின் தீவிரவாதம்



     மதங்களை குறிவைத்து கலைஞர்கள் படையெடுப்பது இப்போது அதிகரித்து வருகிறது இதற்க்கு காரணம் எளிதில் விளம்பரம் கிடைக்கும் என்பதல அல்லது
கலை என்றபெயரில் செய்யும் திவிரவதமா கலை வளரவேண்டும். அதற்காக ஒரு சமுதயத்தையே; அதன் நம்பிக்கையையே குழிதோண்டி புதைக்கும் படைப்புகள் அளிக்கப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மைகளை உடைக்கும் உழைப்பாளிகளின் படைப்புகளை அரசியல் லாபத்திற்காக உரசி பார்ப்பது தடுத்து நிறுத்தபடவேண்டும்.

  பாலா தன் படங்களில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துவர் என்றபோதும் பரதேசி அதையும் மீறி ஒரு வரலற்று சுவடாக உலக சினிமாவில் நிற்கும் நடிகர்களை கதாபாத்திரங்களாக மாற்றுவது பாலாவின் சிறப்பு . படம் பார்த்தபின்பு மக்கள் மனதில் கதாபத்திரங்கள் வருவது ஒரு இயக்குனரின் வெற்றி என்றால் பாலாவின் எந்த ஒரு படமும் அதை தவறவிட்டதில்லை.

    பொலி விமர்சனங்களால் பதிபுகுள்ளாகும் படைபளிகளில் கவுதம்மேனன் இணைத்திருக்கிறார். இளமை காதலின்   ஊடலை சொன்ன நீ தானே என் பொன்வசதம். இளம்காதலர்கள் மட்டுமே புரியும் படம். அந்த காதல் அறியாதவர்கள் படத்தின் வெற்றியை வேரருத்துவிட்டனர்.



  மணிரத்தினத்தின் படைப்புகள் மொத்தமாக பாரட்டபட்டலும் கடல் அதற்க்கு விதிவிலக்கு என்கிறார்கள். ஆனால் கடல் படமும் சில குறைகளை களைந்தால் சிறப்பாகவே அமைகிறது. குறையே இல்லாத படங்கள் ஏதுமில்லை.விஸ்வருபதில் 
கொடுவந்த கலகத்தின் த்க்கமும் கடலின் வெற்றியை பதித்தது.


  படைப்புகளின் மீது வழக்கு தொடர்வதின் மூலம் தங்களை விளம்பரபடுத்தி கொள்ளும் செயல் நாள்தேறும் அதிகரித்து வருகிறது. சிலபடைபளிகளே தங்களின் படத்தின் விளம்பரத்திற்காக இதை தவறாமல் செய்கிறார்கள் என்ற உண்மையும் இல்லாமலில்லை.

இந்த படத்திற்கும் வன யுத்தம் திற்கும் எந்த சம்மதமும் இல்லாதது ஏன்?
படத்தின் ஆரம்பதில் ஒலிக்கும் வசனதிற்கும்; இறுதியில் ஒலிக்கும் வசனதிற்கும் சம்மதமும் இல்லாதது ஏன்?

  திரைப்படம் என்பது ஒரு சாதாரண பொழுது போக்கு சாதனம் அல்ல அது ஒரு ஊடகம் ,புரட்ச்சி ஆயுதம். மக்களிடையே எளிதில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்
என்பதை படைபாளிகள் நினைவில்கொள்ளவேண்டும் .


                                                                                                   

Sunday, 24 March 2013

சிலுவைக்கே சிறப்பு

பாவத்தின் அடையாளமாக விளங்கிய சிலுவை பரிசுத்தத்தின் மகத்துவமாக மாற்றிய ஆச்சரியம் இயேசு .

இன்று நம் நாட்டில் தூக்கு கயறு எவ்வளவு அவமரியதயகிய ஒன்றாக கருதப்படுகிறதோ அதைவிட பல மடங்கு அன்றைய மக்களால் அவமனத்துகுரிய சின்னாமாக விளங்கியது சிலுவை மரணம்.  அப்படிப்பட்ட ஒரு சிலுவை இன்று மக்கள் நெஞ்சில் அடையாள சின்னமாக அணிதிருக்கின்றனர்.


சிலுவை இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல விண்ணையும் மண்ணையும் இணைக்க வந்த உறவுகோடு -MDM

சிலுவைமரத்தில் சிந்திய ரத்தம்  பாவங்களை கழுவுவி சிலுவையை புனிதம் பெற செய்தது.  சிலுவை ஒரு அடையாளம் சின்னம் மட்டுமல்ல ஒரு ஆராதனை சின்னம், இயேசு இந்த உலகில் வாழ்ந்த ஒவ்வெரு நிமிடமும் அடையாளமாகவே திகழ்தார்.
அவர் செய்த ஒவ்வெரு செயல்களும் ஆராதிக்கப்படுகின்றன.


மனிதற்குலமணிக்கம் இயேசுவால் சிலுவைக்கே சிறப்பு என்றால்; பெண்களுக்குள் அசிர்வதிக்கபட்ட மரியாள்  மண்ணுலகில் பத்துமாதம் இயேசுவை தன் வயற்றில் சுமந்து தன் இரத்ததை பாலாக்கி  மனிதராக  உருகொடுத்த சிறப்பு சிறிதாகத்தே ! இயேசு சிந்திய இரத்தம் மரியாளின் இரத்தம் .


மனிதர் நெஞ்சங்களில் சுமக்கும் சிலுவை அடையாளம் அல்ல; அபிமானம். சிலுவை சுபப்பவன் குற்றவாளி என்ற காலம் மாறி குற்றங்களை மன்னிப்பதற்காக  பலர் சிலுவையை பயன்படுத்துகின்றனர். பாவத்தின்
சிலுவை பரிசுத்தம் ஆக்கப் படத்தின் விளைவே; கிறிஸ்துவின் அடையாளமாகவும், கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் சிலுவை போற்றப்படுகிறது.

சிலுவையில் சிந்தப்பட்ட ரத்தமும்,
சிலுவையில் சிதைக்கப்பட்ட உடலும் பாவம் போக்கும் அருமருந்தாக கத்தோலிக்க திருசபையால் பின்பற்றப்படும் மரபானது.

உண்மையில் சிலுவை மரணம் நமக்கு நினையுட்ட வேண்டியது பாவங்கள் கழுவப்பட்டு மனிதன் புனிதனாக இயேசு உயிர்நித்தது மட்டுமல்ல;
தன்னால் படைக்கப்பட்ட மக்கள் இரட்சிப்பு  பெறுவதற்காக தன் உயிரையே கொடுக்கும் தியாகம்.


நாம் உயிரை கொடுக்கா விட்டாலும்; இந்த சிலுவை நாட்களில் ஆவது நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு நம்மால் ஆனா உதவி செய்வதனால் நாமும் கிறிஸ்தவர்களாக  நிலை பெறலாம்.

ரோட்டோரங்களில் கையேந்தும் இயலாதவர்கள் முதல் இறைவனிடத்தில் கையேந்துபவர்கள் வரை, ஒருவர் மற்றவரை சார்ந்து தான் வாழ்கின்றனர்.

"கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் ,தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் "

மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவுவது இயேசு விருப்புவது அதுவே கிறிஸ்தவம் அதை சிலுவை நாள்களிலாவது கடைபிடிப்போம் ...



Thursday, 14 February 2013

திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 1


             திரைக்காணா கிறுக்ல்ள்


காதலர்தின வாழ்த்துக்கள்...

பட பட வென நெஞ்சம் துடிக்க, 
சட சட வென என்னை மறக்க... 
உன்னை தேடி என்னை தொலைத்தேன், 
உன்தன்  பார்வையில்  பஞ்சாய் எரிந்தேன்... 

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே 
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே 

இது வரை இந்த நாளை எதிர்பார்த்தே வாழ்ந்தேனடி 
இமைகளை இமைக்க சொல்லி தேடல் முடித்தேனடி 

உன் விழிகளில் நான்   விழுந்தேனடி ,
என்  விழிகளிகளில்  உன்னை வரைந்தேனடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...


காவியத்தில் கண்ட காதல் காலமெல்லாம் காண்பேனடி ,

காதலித்தேன்   உன்னை
காதலித்தேன் 
காதலித்தேன் என்காதலி  
தேன் .

பதித்து வந்தாய் கால் பதித்து வந்தாய்; 
படைக்க வந்தாய் என்னை படைக்க வந்தாய் .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

feel my love; feeling love 
feel  my love; feel in love 

உதடுகள் மொழி பொய்யானதே; இமைகளின்  மொழி இதமாகுதே ...
நிழலானேன் உன் நிழலானேன்; நிஜமானேன் நான் நிஜமானேன் .

உன்வளைவுகளில் என்னை வசியம் செய்தாய்;
என் வாழ்க்கையில் ஒரு வரம் கொடுத்தாய் .

உண்மை சொல்லடி ஒரு நிமிடம்;
ஓவியமாய் நீ பிறந்தாயடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே ...




குறிப்பு :

சீனியர் :100% காப்பி /-
ஜூனியர் : எங்கிருந்துட ?
சீனியர் : கண்டுபுடி ......


பக்கம்- 1

Monday, 14 January 2013

உயிர்தேடும் உலகிலே...

   ""கற்றது கையளவு கல்லாதது உலகளவு"" 

  ஒவ்வொருநாளும் புதுவித அனுபவங்களுடன் நான் அறிந்து வரும் விஷயங்களையும் ஆச்சரியம் தரும் விஷயங்களையும் கிறுக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவை ஒரு தொடராக எழுத நினைக்கிறேன் இதில் வரும் செய்திகள் நீங்கள் அறிந்தவை ஆகலாம், மொக்கைகள் ஆகலாம், உண்மைக்கு புறம்பாகலம் எதுவானாலும்  என்னுடைய பார்வைகளில்  பட்ட  கண்டேப்புகளே, உலகில் வாழும்  ஒவ்வொரு உயிரும் எதையோ தொடுகிறது. அவ்வாறு உயிர்கள் தேடும் உலகில் என் தேடல் ...


பொருளடக்கம் :
1.அறிவின்  தேடல்
2.அறிவியலின் தேடல்
3.பொருள் தேடல்
4.இறை  தேடல்
5.இன்பமுறுதல்
6.அமைதியை தேடி
7.மரணம் தேடல்
8.என் தேடல்





முன்னுரை :
  மனிதன் மரணத்திற்கு பயப்படுகிறான் மரணத்திலிருந்து விடுபடநினைத்து
ஓடுகிறான். இந்த உலக வாழ்க்கை நிலையானது இல்லை என்ற எண்ணம் அவனிடன் இருப்பதில்லை. மரணத்தை கண்டு அன்சாதவனே உலகில் பல சாகசங்களை செய்து முடிக்கும் வெற்றி வீரனாக வலம் வருகிறான் .உலகில் பல சாதனை மனிதர்கள் வாழ்த நாள் கொஞ்சம்தான் ஆனால் அவர்கள் வாழும் நாளே அதிகம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினனமும் பிறந்த நாள் முதல் உயிர்வாழும் ஒவ்வொருநோடியும் உயிர்வாழ்வதரற்க்காக போராடிக்கொண்டு இருக்கிறது .
நிலையில்லாத உலகத்தில் பொருள் சேர்த்து  வைக்கின்றது. நோய்களும் விபத்துகளும் உயிர் நிலையானது இல்லை என்ற உண்மையை உணர்த்திவருகின்றன .

மனிதனின் தேடல் அடுத்த உயிரகளை மதிக்காமல் தான்,  தன், என்ற வட்டத்திற்குள்ளே தொடர்கிறது.உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்க்கான உரிமை உள்ளது. தான் கடந்து வந்த பாதையை பலர் நினைத்து பார்ப்பதில்லை. அதுபோலவே வயதின் இளமையில், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமும் பலபேரிடம் இருப்பதில்லை .

கடந்து வந்த பாதையை மறப்பவனின் வெற்றி நிலையானது அல்ல அந்த    வெற்றியை அவனால் தக்க வைத்து கொள்வதும் கடினம் .

1.அறிவின்  தேடல் :
 அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன்.

அறிவு:   நாம் அறிந்து கொண்டவை, இதில் ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்த அறிவில் மேலோங்கி இருக்கின்றனர். புரிந்துணர்வுடன் கற்ப்பவருக்கே இது கல்வியறிவு ஆகும். இவை புத்தக அறிவுக்கு  உதாரணம்.

அனுபவம்(பயிற்ச்சி ):  ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கற்றுக்கொள்வது; சிலரது கல்வி முறை கூட இவ்வாறே உள்ளது. ஒருபுத்தகத்தை திரும்ப திரும்ப படிபதன்முலன் அதை மனதில் பதித்து கொள்கின்றனர். இது பயிற்சி கல்வியறிவு ஆகாது .உதாரணமாக  சுற்றுல தலங்களில் உள்ள  வியாபாரிகள் திரும்ப திரும்ப கேட்ப்பதன்மூலம்  பலமொழிகளில் பேசும்  பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் பலமுறை படைதிட்டப்பட்ட வைரக்கல் பளபளக்குகிறது ...

ஞானம் :    இது தனித்தன்மையாக உள்ளது ஒவ்வேருவரிடமும் மாறுப்பட்ட (ஞானம்)தனித்தன்மை உள்ளது .இதை கண்டறிந்து அந்த துறைசார்ந்த அறிவைபெருக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்.
 உதாரணமாக:
 நினைவாற்றல், உடல் வலுமை, சிந்தனை திறன் ,...இது போன்றவை பரம்பரையுடன் தொடர்புடையவை .

2.அறிவியலின் தேடல் :
மனிதன் கடவுளாக முயர்ச்சிப்பதே அறிவியலின் தேடல் இங்கு மனிதன் தன்னை கடவுளாக மக்கள் இடத்தில் நிலைபடுத்த முயற்ச்சிக்கிறான்  மனிதனால் காணமுடிந்ததே கடுகளவு உலகம்தான் அதில் புதைந்திருக்கும் உண்மைகளையே அறிவியலால் தெளியுபடுத்த முடியவில்லை அதற்குள் மாபெரும் சத்தியக வளர்ந்துவிட்டதாக ஒரு பிரம்மை .

அறிவியலால் அளிக்கப்பட்ட மனித ஆற்றலையே கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குள் அடுத்த கிரகத்தில் குடியேறும் ஆசை....


உண்மையான தேடல் மரணம் இதை நீ அறிவைய மனித 

தேடல் தொடரும் ...

Tuesday, 25 December 2012

மலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை

  ஸ்ப்ரிட் திரைப்படம் சமிபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது . மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் குடி மகனின் வாழ்க்கையை அடி ஏற்றி கதை திரைகதை அமைக்க பட்டிருந்தது.
  குடி குடியை கெடுக்கும் என்ற வாக்கியத்தை இரண்டரை மணி நேரம் வாழ்ந்து காட்டியிருந்தனர். பல உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டிய இந்தப்படம் சிலராது வாழ்க்கையிலாவது மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . வசதிக்கேற்ப ஒவ்வொருவரின் பானங்களும் நாடமாடும் தோரணைகளும் மாறுபடலாம் ஆனால் பாதிப்பு போதுவனதகவே உள்ளது .
  குடி மகனின் சுயநிலையை எவ்வாறு ஆல்ககால் மறக்க செய்கிறது. தான் என்ற அகந்தையில் அவன் ஆடும் ஆட்டம் . குடும்பவாழ்க்கை சீர்குலைவது என ஓவ்வொன்றும் உண்மை முத்துக்கள். குடி மகனின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறி ஆக்கபடுகிறது.
      குடிப்பது தவற என வாதிடும் இந்த அத்திப்புத்தி சாலிகள் தன்னிலை மறப்பதை உணர்வதில்லை  போலும். குடிபோதையில் இவர்களின் அறியுதிறன் அளிக்கபடுகிறது. விட்டால் சமுதாயம் தவறு என் குறிப்பிடும் பல செயல்களை தவற என கேக்கவருவர்கள் .
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அமுதமே அப்படி இருக்க ஆல்ககால் சும்மாவா. படத்தில் மோகன்லாலின் நண்பன் இறந்தவுடன் மோகன்லால் 
தெளிவடைவதாக 
சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் இதன் சத்தியம் குறைவே ஆனால் நடந்தால் உயிரிழந்த 
மனிதருக்கு  செய்யும் மரியாதையாக அமையும். ஆல்ககாலை மருந்தாக உட்கொள்பவருக்கும் விருந்தாக உள்கொள்பவருக்கும் வித்தியாசமில்லையா என்ன ?
  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுகந்திரம் உள்ளது. அது மற்றவரின் வாழ்கையை பதிப்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது . அப்படி பாதிக்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவதே அரசின்கடமை அல்லது அதை வைத்து காசு பார்ப்பதில்லை. பல இடங்களில் காவலர்களும் கையுட்டு வாங்க குடியை காரணம் கட்டுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளனர்.
படத்தை பார்க்கும் புதிய தலைமுறையாவது குடிபழக்கத்திற்கு அடிமையகமலிருந்தால் அது இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றி...