அலசல், புத்தகம், விமர்சனம்.

Thursday 26 July 2012

மலையாளத்தில் ஒரு பிளாக் காமெடி

(പത്മശ്രീ ഭരത് ഡോക്ടർ സരോജ് കുമാർ)

மலையாளத்தில் இந்த வருடம் வெளிவந்துள்ள பத்மஸ்ரீ
பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படம் சினிமாவில் உள்ள ஹிரோயிசத்தை மையமாகக்கொண்டு திரைக்கதை அமைக்கபட்டுள்ளப்படம்.

படம் திரைக்கு வருவதற்க்கு முன்பே மலையாள
முன்னனிநடிகரான மோகன்லலுடன் படத்தினியக்குனரும் நடிகருமான  ஸ்ரீனிவாசன்  மீடியாக்கள் மூலம் மோதிக்கொண்டார்.

படத்தில் உள்ள சிலக்காட்சிகள் மோகன்லாலுடன்  பொருந்தினாலும் படம் முழுவதுமாக பார்க்கும்போது தமிழ்சினிமாவின் இன்றய நிலையையே காட்டுகிறது.

மலையாள திரைப்படங்களில் நடிகர்களாலும்; இயக்குனர்களும் தமிழர்களை  அவமதிப்பது இது புதிதல்ல, என்றாலும் இதில் உள்ள உண்மைகளையும் மறுப்பதற்கில்லை .

படம் வெளியாகிய அன்றையதினமே வெற்றிவிழா கொண்டாடுவது,
படத்தின் கதையை மாற்றியமைப்பது, லாஜிக் இல்லாத மிகைபடுத்தும்  காட்சியமைப்பு, விளம்பரத்துறையில் ஆதிக்கம் போன்றவை தமிழ்சினிமாவில் அதிகரித்துவிட்டன.
பத்மஸ்ரீ பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படத்தின் முதல்பாகமான 
உடயனணு தரம்  தமிழில் வெள்ளித்திரை என்றபெயரில் ரீமேக்  செய்யப்பட்டு 
2008 ஆண்டு வெளிவந்தது.

இந்த படத்திலும் நடிகர்களின் ஹிரோயிசத்தை சுட்டிக்காட்டியிருப்பர்கள்.
ஆனால் இப்போது ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எந்த பெரிய நடிகர் நடித்த படமானாலும் மக்கள் மனதை கவரும் படங்களே நிலையான வெற்றியை பெறுகின்றன.

மலையாலத்திரையுலகம் தன்பாரம்பெரிய கதைகளை  விட்டு விட்டு முழுக்க
கமொர்சியல் பக்கம் திரும்புவதால்; தமிழில் வெளியாகும் நல்ல கதைகள் அந்த மண்ணிலும் பெரிய வெற்றி கண்டுவருகின்றன. இதன் விளைவாகவே சிலர் தமிழ்நாட்டை தங்கள் படங்களில் அவமதித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் சிறந்த நடிகர்களும் இயக்குனர்களும் உருவாகிவருவதால் தமிழ்சினிமா விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை அடையும் என்பதில்
சந்தேகம்  இல்லை. ஆனால் அதற்க்கு ரசிகர்களும் துணைநிற்க வேண்டும்.

விளம்பரங்களை நம்பாமல் சிறந்த திரைப்படங்களை வெற்றி பெற செய்ய வேண்டும், பெரிய நட்சத்திரத்தின் படமானாலும் தகுதி இல்லாத படங்களை உண்மை விமர்சனங்களால் களையறுக்க வேண்டும்.

தமிழ்சினிமா உலகளவில் உயர்ந்து விளங்கட்டும் .


No comments:

Post a Comment