தமிழில் ஒரு உன்னதப்படைப்பு நான் ஈ
லாஜிக் தேவையில்லாத ஒரு கதையை லாஜிக்குடன் தந்துள்ள
இயக்குனர் s .s ராஜமௌலி
பாராட்டுக்குரியவர் .
கதாநாயகன் இறந்தவுடன் கதறியழும் சினிமாலாஜிக்கை உடைத்து யதார்த்தமான வாழ்க்கையை பதிவாக்கியுள்ளார் ராஜமௌலி. கதைக்கு தேவையில்லாத
பாடல்களையும் காட்சிகளையும் தவிர்த்து திரைக்கதையின் வேகத்தைக்கூட்டியுள்ளார். திரைக்கதையின் ஒவ்வொருக்காட்சியும்
படத்திற்க்கு பலம் சேர்க்கின்றன...
குடும்பத்துடன் பார்க்கும்வகையில் தரமானக்காட்சியமைப்பு. எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் ஈ; ஈ -யாகவே செயல்படுகிறது. ஈ -க்கு கதாநாயகியின் மைக்ரோஆர்ட் படிப்பை சக்தியக்க மாற்றிய லாஜிக் அருமை.
சுதிப்-ன் நடிப்பு படத்திற்க்கு மாற்றொரு பலமாக அமைந்துள்ளது. அனிமெசனில் உருவாகும் ஈயை மனதில்க்கொண்டு அவ்ர்க்கொடுத்துள்ள முகபாவனைகள் அவரை சிறந்த நடிகனாக முன்னிறுத்துகிறது .
மரகதமணியின் இசையில் பாடல்கள் மனதில்பதியும் படி உள்ளன, பின்னனியிசையிலும் மரகதமணியின் பணி சிறப்பாக உள்ளது.
கிராபிக்ஸ் படத்துடன் பிரிக்கமுடியாத வகையில்
கலந்துக்காணப்படுகிறது.
சமந்தா-நானி காதல் மனதை தொடுகிறது, படம் முழுவதும் சமந்தா அழகுப்பதுமையாகவே வருகிறார்.
ராஜமௌலி தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றி கண்டுள்ளார்.
ராஜமௌலிக்கு ஹாட்ரிக் ஹாட்ரிக் வெற்றி...
ReplyDelete