அலசல், புத்தகம், விமர்சனம்.

Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Monday, 5 October 2015

குற்றம் கடிதல் - திரையில் ஒரு பாடம்

குற்றம் கடிதல் -  திரையில் ஒரு பாடம்


நண்பர்களே ஒரு குற்றம் கடிதல் என்ற திரைப்படம்  ஒரு மனித வாழ்க்கையை தத்துருபமாக எடுத்துக்காட்டி வெளிவந்துள்ளது. அது  மட்டுமல்லாமல் திரைப்படம் எடுத்து வைத்திருக்கும் கேள்வியும் சாதாரணமான கேள்வி அல்ல வருங்காலங்களில் பெரும் பிரசினையாக உருவெடுக்க போகும் ஒரு விஷயம். 


"உலகம்  முழுவதும் குப்பையும், சாக்கடையும் நிறைத்திருக்கு; எல்லாத்தையும் சுத்தம் செய்ய முடியாது நம்ம காலுக்கு வேணும்னா செருப்பு போடலாம் "

இந்த வேலையை தான் வருங்காலங்களில் குழந்தைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்யவேண்டிய காட்டாயம்.



குற்றம் கடிதல் அலசல் ஒளிபதிவிர்க்கு இங்கு கிளக் செய்யவும்



Sunday, 31 May 2015

ஆன்லைன் ஷாப்பிங்...



ஆன்லைன் ஷப்பிங் நவீன நாகரிகத்தின் ஒரு  வரமாக வர்த்தகரீதியாக கருதபடுகிறது, இந்த ரீதியில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றனர், மக்கள் இணையதள இணைப்பின் மூலம், இந்த முறையிலான வர்த்தகத்தில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இருத்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க நினைக்கும் மக்களின் நேரம் இல்லாமை இந்த வர்த்தகத்திற்கு பெரிதும் துணைநிற்கிறது.


வாடிக்கையாளர்களின் நிறைவு

ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் முன்  அதன்  தரம் குறித்தன நுகர்வோரின் குறிப்புகள் பெரிதும் பயன்படுகிறது.
 பல வர்த்தக நிறுவனங்கள் பணம் திரும்ப தரும் வசதி, சாந்த முறையில் பொருள்களை வாங்கும் வசதியையும் அளிது வருகிறது.
அதிகமான  பொருக்களை பார்க்க குறைந்த நேரமே போதுமானதாக உள்ளது .

சேவைநிறுவனங்களின்  இலாபம்
                               மிக அதிக பொருள் செலவில் வணிக தளங்கள் நிறுவவேண்டிய அவசியம் இல்லை ,
விளம்பரத்திற்கான செல வும் மிக குறையே , சமுக இனைய தளங்களில் வாடிக்கையாளர்களே பொருள்களை பரிந்துரைகின்றனர்.
மாநில ரிதியான விற்பனை வரி வித்தியசதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் .
முதலீடுகள்  பங்குதாரர்கள் மூலம் பெறபடுகிறது .
மக்களை  கவரும் விதமாக மாய  சலுகை விளம்பரபடுத்த படுகிறது.
காலவரையாகும் பொருள்களை எளிதில்  விற்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாக உற்பத்தியாளர்களால் தேர்தெடுக்கபடுகிறது.
50 % மக்கள்  பொருள்களில் குறைபாடு இருந்தால் திரும்ப கொடுக்கும் சேவையை பயன்படுதுவதில்லை.
 
 
மொத்தத்தில் பார்க்கும் போது வருங்காலங்களில் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் விரும்புவார்கள்ம, பல வணிக நிறுவனங்கள் மூடபடலாம் அல்லது ஆன்லைன் சேவைக்கு மாறலாம் , இடைதரகு விலை குறைய வாய்பிருகிறது...

 

Sunday, 12 April 2015

மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்

 
ஒருசிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்கிறது என் எழுத்துகளும், கருத்துகளும் ....
 
சமிபகாலமாக வெற்றி கூட்டணி என்றபேரில் மீண்டும் மீண்டும் வந்த வாசமே வந்து வந்து போகிறது, இதில் சில திரை படங்கள்  வெற்றியடைந்தாலும், இரண்டு படங்களின் கட்சிகளும் ஒப்பிடும் வகையில்தான் உள்ளன. இதற்கு புதிதாக ஒரு பெயர் சூட்டும் கரணம் தான் தெரியவில்லை.
 
அதே கூட்டணி, அதே கதை களத்தில் படங்கள் எடுப்பதில் தவறில்லை; ஆனால் ஹாலியுட் படங்களை போல் பாகங்களாக தயாரிக்கலாம். புதிய பெயரில் மக்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவதை விட - இது தான் கதை என்று மக்கள் ஏற்றுகொள்வார்கள்.
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களின் வேற்றுமையை கண்டறிக என போட்டியே வைக்கலாம் .
 
மனம் கொத்தி பறவை மாறுபடியும் வெள்ளைகாரதுரை 
 
பருத்திவீரன் சில வருடங்களுக்கு பின் கொம்பன், ஆனாலும்  படம் பார்க்கும் விதமாகவே இருந்தது.
 
சில இயக்குனர்கள்  தமிழில் கூட ஹலியுட்  முறையை பின்பற்றுகிறார்கள்; உதாரணமாக- சிங்கம் 2,காஞ்சனா 2...
 
முந்தய விஜயின்   படங்கள்  ஒரே கதையமைப்பில் இருப்பது சாதாரணம் அது சற்று மாறிவருகிறது.

விஜயகாந்த், சரத் குமார் , கார்த்திக் , ஆர்ஜுன் போன்ற ரிட்டாடு ஆனா நடிகர்களின் மத்தியில் இடைக்கால நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தபட்டியல் நாளுக்கு நாள் அதிகமாக காரணம் புது முகங்களின் அறிமுகம்,  அதே சமயம் ஷாம் , பிரசாந்த் , விக்ராந்த் , ரவி கிருஸ்ன , ரமேஸ் , சிபிராஜ் போன்ற பின்பலம் உள்ள நடிகர்களின் "கம் பேக் " முயற்சிகளும் தொடர்கிறது.

அதைபோல் சினிமாவில்  தன்துறைவிட்டு தாவி தானும் ஹீரோ என  திரைக்குமுன் வந்து  தத்தளிப்பவர்களும் ஏராளம் அவர்களின் பட்டியல்  வடிவேல் ,விவேக் , சேரன் , s .j சூரியா, என  நீளுகிறது.

என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம் அதுதான் சினிமா .....
                                                                                                                               தொடரும்...
 

Monday, 19 January 2015

ஐ அழகு என்றால்; பி கே அறியாமையா ?

 

 
 
நிச்சய வெற்றி என்று களமிறங்கிய இரண்டு படங்கள்  "ஐ  " மற்றும்  "பி கே" ஆனால் ...
 
  "ஐ" திரைப்படம்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது, விக்ரமின் நடிப்புக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவரும் படங்கள், அணைத்து தரப்பாலும் பாராட்டபடும்; அதை ஷங்கர் மறந்திருப்பதாக தோன்றுகிறது. பிரம்மாண்ட படைப்புகள் கொடுக்க முன்வரும் ஆஸ்கர் நிறுவனத்தை படத்தின் வெற்றி யேசிக்க வைக்கும்.
 
விக்ராமின் கடும் உழைப்பையும், பணத்தையும் வீணாக்கி இருப்பதாகவே தெரிகிறது.விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் , அந்த நடிப்பை அந்த ஒப்பனை உருவம் மறைப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் வரும் அந்த உருவங்கள் படத்தை பார்பவர்களை முகம் மாற்ற வைக்கிறது.
 
பல கோடிகள் செலவு செய்து படம் இயக்கும் இவர்களுக்கு ரசிகனாக படத்தை 
பார்க்க மாட்டார்களா என்ன ?
" கதை திரைக்கதை வசனம் இயக்கம் " படத்தில் தமிழ் சினிமாவை அசைபோடுவது சரியாகத்தான் இருக்கிறது.
 
ஷங்கர் படங்களில் கதையிருப்பதில்லை, ஆனால் புதுமை இருக்கும் அந்த இடமும் காலியாக இருக்கிறது. கொடுத்த பணத்திற்கு முற்பதியை ரசிக்கலாம். லாஜிக் என்ற ஒன்றை மறந்தே உருவாக்கப்பட்டுள்ளது  அந்த உருவம் வரும் காட்சிகள் .

                   **********************************************


"பி கே"  திரைப்படம் செல்வராகவன் தவறவிட்ட இரண்டாம் உலகத்தை 
சாதித்துள்ளது. கற்பனைகளால் நிரப்பவில்லை குழந்தை பருவத்தில் வரும் அறியாமை அழகுபடுத்துகிறது.
 
மனிதன் பல மொழி,மதம்,இனம் என  வாழும் இவ்வுலகில்; மனதால் பேசும் மனிதர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துக்கிறது. மனிதனை பிளவு படுத்தும் வேற்றுமைகளுக்கு அடையாளம் கேட்கிறது.
 
அமீர்கான் நடிப்பில் மனதை கவருகிறார். படமுழுக்க சிரித்து மகிழ்ந்தாலும்; படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்க வேண்டியவை.

இது ஒரு மதத்தை இழிவு படுத்தும் படமல்ல மனிதனை மனிதனாக காண தடைகள் உள்ளன என காட்டும் படம்.
 
பி கே இயக்குனரின் முந்தய இரண்டு படங்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு கல்லக்கட்டின ஆனால் இந்த படத்தை தமிழுக்கு எடுத்து வருவார்களா என்பது சந்தேகமே..

                                                                                                                தொடரும்.....

Saturday, 11 October 2014

அண்ணாச்சி என்னாச்சி ; அம்மா ஆட்சி


 "அண்ணாச்சி என்னாச்சி"

"என்னனு சொல்லுவேன்;ஆரம்ப காலத்தில தொழிலுக்கு புதுசு. அதன் மாட்டிகிட்டது, புடிச்சி உள்ளபோட்டபிறக்கும் தமிழ்நாட்ட விடாம ஆட்டுது."

"என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிறிங்க; கடைசி நடத்த எலைசன்ல கூட அமோக வெற்றி தான்னுங்களே "

"அதுதான் அண்ணாசி அம்மையாருக்கு ஆப்பா போச்சின்னு பேசிக்கிறாங்க, பிரதமர் ஆக ஆசைபட்டு முதல்வரும் போச்சி"

"பாவம் அண்ணாசி பொது மக்கள் பாடாய் படுறாங்க போக்குவரத்து பெரிசா பாதிக்குது."

"அது உண்மைதான் அண்ணாசி, ஆனா இப்ப கூட காட்சி காரங்க எலைசன் டைம் போல காசு செலவு பண்ணுறாங்களாம்."
 
"ஆமா அண்ணாசி கேள்ள்விபட்டேன், மொட்டை அடிச்ச 200ரூபா, ஊர்வலத்தில வந்த  100 ரூபா, உண்ணவிருததில கலத்துகிட்ட 500 ரூபா-னு  ஒரு லிஸ்றே வைச்சிருக்கன்களாம்."
 
"அது மட்டுமில்ல அண்ணாச்சி, இந்த தடவ பெரிசா பனிருக்காங்களாம்; தனியார் கல்வி நிறுவனக்கள மூட ஒரு ரேட்டு, தனியார் பஸ் நிறுத்த ஒரு ரேட்டுன்னு". 
 
"என்ன பண்ணியும் ஜமீன் கிடைக்கலையே ?"
 
"அது ஒண்ணுமில்ல அண்ணாச்சி  எதிர் தரப்பு தீர்ப்புல உறுத்திய இருக்காங்களாம்"
 
"இந்த சினிமா காரங்க சப்போர்ட் பண்ணுறதா தெரியுது, அதுவா நடிகிறவங்கனுக்கு சொல்லியா கொடுக்கணும், காசுதான் வாங்கமுடியாது. கடைசிவர கணக்கு  காட்டாம பணம் சம்பாதிக்கணும் இல்ல."
 
"இவங்க கலவரம் என்கிற பேருல பொது சொத்துகள நாசம் பண்ணுறத, ஆளும் கட்சின்னு யாரும் கேக்க மட்டேன்கிறான்களே ?"
 
"நீங்க வேற அண்ணாசி ஒரு போட்டவை கூட மாத்த பயருறாங்க அப்புறம் எப்படி கலவரத கட்டு படுத்துவாங்க; அதன் கூட்டம் கூடின ஊர்வலம்னு கிளம்பிருறாங்க"
 
"பொது சொத்துகள நாசம் பண்ற காட்சி ஏத இருத்தாலும்; அபராதம் விதிகணும்; கட்டலென்ன அடுத்த தேர்தல சம்மதபட்ட இடத்துல போட்டியிட தடைவிதிக்கணும்."
 
"இதெல்லாம் நடக்குங்களா அண்ணாசி; ஏதோ பொது மக்களுக்கு பாதிப்பு இல்லெனா  சரி, என்ன பண்ணியும் உபயெகம் இல்லாததால புதுசா பெட்டி மாத்திகிலாமுன்னு எதிர் தரப்போட பேசிகிறாங்களாம்."
 
"ஆமா அண்ணாச்சி கூடுதலா கொடச்சல் குடுத்த திகார் தான்னு கேள்வி பட்டாங்க போல; என்ன நடக்குமுன்னு பொறுத்திருந்து பாப்போம்."
 

Wednesday, 24 September 2014

நல்லது கேட்டது நாலுபேருக்கு தெரியனும் இல்ல ...

* லிங்குசாமி இரட்டை வேடன்னா எம்.ஜி.யார் காலத்திலேயே இருக்காரப்பா.

*ஐ  ட்ரைலர் பார்த்தா விக்ரம் பின்னிருக்காரு போல  தெரியுது.

*திரைப்படத்தின் கடைசி பதினைத்து நிமிடங்கள் முக்கியமானது அதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. (ஜிகிர்தண்டா ,மங்காத்தா ,பிட்சா )

*படத்தில ஹிரோயின் நடிச்சி  காட்டி  போட்டிபோடுவாங்க ; இப்ப காட்டுறதில மட்டும் தான் போட்டி போடுறாங்க.

*சிவாஜி குடுபத்தில இருந்து வந்த பையன் படகள அடுகிறனே தவிர முதல் படம் தான் இன்னும்.

*தம்பி ஆக்ஸனு  பறக்காம கதைகளே நடிங்கபா, எல்லேருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.

*மலையாள திரையலகில் வெற்றி பெறும் படங்கள் பலவற்றின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளன.(bangalore  days, how old are you,...)

*கன்னட திரையலகம் பவர் திரைபடத்தின் மூலம் அடுத்த கட்ட வியாபார உலகத்தில் கால் வைத்துள்ளது.

*"எக்ஸ்பண்டப்ள்" போல் தமிழிலும் எக்ஸ் ஹீரோக்கள் சேர்த்தல் நல்லாத்தான் இருக்கும் தயாரிப்பாளர் கிடைப்பதுதான் கடினம்.

*பிரபல இசையமைபாளர்கள் இசை கூட இரைச்சல் ஆகிவருகிறது.
 

Monday, 16 June 2014

வருவதற்கு முன் பொம்மைபடம்; வந்தபின் புதுமை படம்

"வருவதற்கு முன் பொம்மைபடம் வந்தபின் புதுமை படம்", கோச்சடையன் படம்  சாதித்திருப்பது  இதுதான். 


சாதாரண அனிமேஷன் படமாக கருதப்பட்ட இந்தப்படம், வருக்கால தொழில்நுட்பத்தின் பாதையாக அமைத்துள்ளது. படத்தை ஒருமுறையாவது பார்க்காதவர்கள் இல்லை.
இந்திய சினிமாவின் பரிமாணமாறுதலில் மயில் கல்லாக இருக்கபோகும் படம். ஆரம்பத்தில் அனிமேசன் உணர்வு மனதை விட்டு மாற மறுத்தாலும்; ரஜினி அதை சரிசெய்துவிடுகிறார். 

படத்தில் குறைகள் உள்ளன . இருப்புனும் நிறைகளை பட்டியலிட வெடியதருணமிது .

* ரஜினி இது ஒரு நடிக்கரின் பேரல்ல சினிமாவின் ஒரு ப்ப்ரண்ட்  , இந்தியவை தாண்டி இந்த ப்ரண்ட் விற்பனை ஆகும்.

*நாகேஷ் கதாபத்திரம் வருங்கலத்தில் மறந்த நட்சத்திரங்கள்  கதாபத்திரங்கள் ஆக போவதை உறுதிபடுத்துகிறது. (ராஜமொலி ஒரு பாடலில் NTR யை ஆடவைத்திருந்தார்)

*இசையில் A .R  தவறவிடவில்லை அது போர்காட்சிகளில் தெரிகிறது. அனிமெசன்படதில் பாடல்களா ! சரியாக பயன்படுத்தபடுகிறது.

*Lord of the rings படத்தில் கையாளபாடுவதைபோல் அனிமேஷன் விலங்குகள் 3D யில் பிரமிக்க வைக்கின்றன.


Monday, 14 April 2014

வர+தட்சணை =வரதட்சணை வாங்கலாம் !



திருமணங்கள் செர்க்கதில் அல்ல ரோக்கதில் நிச்சயக்க படுகிறது. என்ற பெண்விட்டாரின் குற்ற சாட்டு நியாமற்றது. காரணம் இன்று திருமணங்கள் வெறும் மன பொருத்தத்தை மட்டும் பார்த்து நடப்பதில்லை ; இங்கு பார்க்கப்படும் பல்வேறு பொருத்ததில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதில் தவறில்லை காரணம், வாழ்க்கை என்ற வண்டிக்கு  பணம் என்ற எரிபொருள் அவசியமானது.

ஆண் -பெண்  இருவரும் பணிக்கும் வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு தங்களது இருவரது வருமானம் சம  சரியாக  கலப்பதில் தவறில்லை.  ஆண்  பெண்ணுக்கு நிகராக கருதப்படும்போது. தான் படித்த படிப்பு, அழகு , குடும்ப பாரம்பரியம் என்று பார்க்கும் பொருத்ததில் பணமும் சேர்க்கபடுகிறது. 


பெண் விட்டாருக்கு வர தட்சணை கொடுக்கவேண்டும் என்ற பெண் புரட்சியின் வாதம் சற்று உற்று நோக்க வேண்டியது, இங்கு  பெண்கள்  விலை பொருளா  என்ன  ?

பெண்வீட்டர்  பார்க்கும் ஆணின் பொருளாதாரத்தையே ஆண்வீட்டரும் பார்க்கின்றனர். இங்கு கட்டாய படுத்துவதை வேண்டுமானால் தவறேன்கலாம். ஆனால் கமிட் மெண்ட் ஆகவே அரேஞ்சி மேரேஜ் உள்ளது.





Friday, 24 January 2014

ட்ரை ஒரு செயல் படாத அமைப்பா ?


   ட்ரை  இந்தியாவில் தொலைதொடர்பு குற்றங்களை குறைப்பதற்காக அரசால் இயக்கப்படும் அமைப்பு; இது இன்று இயங்குகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது .


 "மொபைல்நம்பர் போர்டப்ளிட்டி"பிரச்சினை அதில் முதன்மையானது. தொலைதொடர்பு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய சேவை நிறுவனத்தை மாற்ற நினைக்கும் மக்களின்  ஒரு சதவீதம் கூட அந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா என்பது சந்தேகமே!


  மக்களின் போர்டபில் முயற்ச்சி பலனளிக்காமல்          இழுத்தடிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதன் பின்னால் மாதகணக்கில் அலைய முடியாதவர்கள், தொடர்ந்து தங்களுடைய பழைய நிறுவனத்தின் அக்கிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். பதினைத்து நாட்களில் "போர்ட் கோடு" என்னவோ காலாவதி ஆகிவிடுகிறது. பயனாளிகளின் பிரச்சினை காலம்  கடந்து வருகிறது. 

போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்; தவறான போர்ட்கோடு, வாடிக்கையாளர் மறுபரிசிலனை, போர்ட் கோடு காலாவதியாகி விட்டது, தங்களின் புதிய சேவை நிறுவனத்தில் பிரச்சினை;  என்று நீள்கிறது ....

ட்ரை  செயல்படுமா ???


Saturday, 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

Monday, 30 September 2013

சுசிந்திரன் சொன்ன காதல் கதை ...


திரைப்பட தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு "ஆதலால் காதல் செய்வீர்" ஒரு சிறந்த உதாரணம் .




படம் பார்க்குமுன் படத்தின் தலைப்பு ஒருவித காதல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது. படம்பார்த்தபிறகு  படத்தின் தலைப்பு இயக்குனரின் ஆளுமையை மனதுக்குள் பதிக்கிறது .
நாடோடிகளில் உறுதியற்ற காதலால் நண்பர்களின் பதிப்பை பார்த்த நமக்கு
அதே காதலால் குழந்தைகளின் ஏக்கத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் கடைசி ஆறு நிமிடங்களில் யதார்த்த படுத்தியள்ளர் இயக்குனர் .

Tuesday, 25 December 2012

மலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை

  ஸ்ப்ரிட் திரைப்படம் சமிபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது . மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் குடி மகனின் வாழ்க்கையை அடி ஏற்றி கதை திரைகதை அமைக்க பட்டிருந்தது.
  குடி குடியை கெடுக்கும் என்ற வாக்கியத்தை இரண்டரை மணி நேரம் வாழ்ந்து காட்டியிருந்தனர். பல உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டிய இந்தப்படம் சிலராது வாழ்க்கையிலாவது மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . வசதிக்கேற்ப ஒவ்வொருவரின் பானங்களும் நாடமாடும் தோரணைகளும் மாறுபடலாம் ஆனால் பாதிப்பு போதுவனதகவே உள்ளது .
  குடி மகனின் சுயநிலையை எவ்வாறு ஆல்ககால் மறக்க செய்கிறது. தான் என்ற அகந்தையில் அவன் ஆடும் ஆட்டம் . குடும்பவாழ்க்கை சீர்குலைவது என ஓவ்வொன்றும் உண்மை முத்துக்கள். குடி மகனின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறி ஆக்கபடுகிறது.
      குடிப்பது தவற என வாதிடும் இந்த அத்திப்புத்தி சாலிகள் தன்னிலை மறப்பதை உணர்வதில்லை  போலும். குடிபோதையில் இவர்களின் அறியுதிறன் அளிக்கபடுகிறது. விட்டால் சமுதாயம் தவறு என் குறிப்பிடும் பல செயல்களை தவற என கேக்கவருவர்கள் .
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அமுதமே அப்படி இருக்க ஆல்ககால் சும்மாவா. படத்தில் மோகன்லாலின் நண்பன் இறந்தவுடன் மோகன்லால் 
தெளிவடைவதாக 
சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் இதன் சத்தியம் குறைவே ஆனால் நடந்தால் உயிரிழந்த 
மனிதருக்கு  செய்யும் மரியாதையாக அமையும். ஆல்ககாலை மருந்தாக உட்கொள்பவருக்கும் விருந்தாக உள்கொள்பவருக்கும் வித்தியாசமில்லையா என்ன ?
  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுகந்திரம் உள்ளது. அது மற்றவரின் வாழ்கையை பதிப்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது . அப்படி பாதிக்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவதே அரசின்கடமை அல்லது அதை வைத்து காசு பார்ப்பதில்லை. பல இடங்களில் காவலர்களும் கையுட்டு வாங்க குடியை காரணம் கட்டுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளனர்.
படத்தை பார்க்கும் புதிய தலைமுறையாவது குடிபழக்கத்திற்கு அடிமையகமலிருந்தால் அது இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றி... 

Wednesday, 31 October 2012

கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்

           ஹாலிவுட் திரைப்படங்களில் விறுவிறுப்புடன் திரைக்கதை இருப்பதால் மொக்கைகள் கூட வசூலை அள்ளுகின்றன. தொடர்வரிசையில்     வரும் திரைப்படங்கள்   சிலவற்றில் நம்மஊர் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்ககூட கதை இருப்பதில்லைசொல்லப்போனால் சிந்துபாத்( தினத்தந்தி) அளவுதான். அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஓட்டும் ஓட்டு தாங்கமுடியவில்லை.


   ஒரே படத்தை புது  தொழில்நுட்பம் வரும்போது எல்லாம் தயாரித்து காசுப்பார்க்கின்றனர். அரைத்த மாவையே அரைக்கின்றனர். குறிப்பாக (ஸ்டார்ஸ் வார்ஸ்)திரைப்படம் நம்மூரில்  தூதர்ஷ்சனில் தொடர்களாக வெளிவந்த சத்திமான் ,ஜுனியர்- ஜி, ஆரியமான்,ஹிமேன்  அளவுக்கூட கதை இருப்பதில்லை ஆனால் வசூலில் வாரி குவித்தன .


போர்ன் தொடர் திரைப்படங்கள் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி மகுடம் சூடியது ஆனால் கதையை பார்த்தல் இரண்டு பக்கங்கள் கூட இல்லை.

ஜேம்ஸ்பண்ட் திரைப்படங்கள் ஹாலிவுட் மொக்கைகளுக்கு சிறந்த உதாரணம் ரசியாவையே குறிவைத்து பலபாகங்கள் மொக்கை போட்டன. படபிடிப்பு தளங்கள், கேமராகோணங்கள், கவர்ச்சி இவற்றின் புதுமையால் அரைத்த மாவையே வைத்து காசுபார்க்கின்றனர்.  ஜேம்ஸ்பண்ட் தொடரில் தற்ப்போது நடித்துவரும் சில நடிகர்களுக்கு நடிக்கவேண்டும் என்பதே மறந்து விடுகிறது .


    இதில் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு சிலர் வக்காளத்து வாங்குகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழ்திரையுலகில் வரும் சிறந்த படைப்புக்களை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.

  இன்னும் சிலர் தமிழில் ஹிரோயிசத்தை எதிர்த்துவிட்டு;  ஹாலிவுட் ஹிரோயிசத்திற்க்கு கைதட்டுகின்றனர்.உலக அளவில் பல நல்ல திரைப்படங்கள் வந்தாலும், ஹாலிவுடில் மொக்கைகளே அதிகம் .

   ஹரிபட்டர் தொடர்கள் இரண்டு பாகங்கள் எடுப்பதற்க்கான கதையே உள்ளது அதை வைத்துக்கொண்டு பல பாகங்கள் எடுத்து காசுப்பார்த்தனர். திகிலும், குழந்தைகளின் ஆர்வமும், பின்னனியிசையும்  துணைநின்றது . நம்மூரில் தொலைகாட்சி தொடர்களில் பின்பற்றப்படும் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும்
ஆர்வத்துடன் ஒவ்வொரு பாகங்களையும் முடிக்கும் வித்தையே கையாளப்பட்டுள்ளது .

(லாட் ஆப் தி ரிங் பாகங்கள் தனித்துவம் வாய்ந்தவை அவை இதில் சேராது.)

  தமிழிலும் தற்போது இந்த பழக்கம் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் இப்போது ரீமேக் என்ற பெயரில் தமிழ்சினிமாவின்  அடையாளங்களாக விளங்கும் திரைபடக்களை ரீமேக் செய்து  மொக்கைகள் ஆக்குகின்றனர்.  இதற்க்கு உலகில் சிறந்த படங்களை தமிழில் காப்பியடிப்பதே மேல் .

  கிணத்து தவளைகள் தான் அறிந்ததே உலகம் என்ற எண்ணத்துடன் வாழ்பவை அதுபோலவே உலகில் பலமனிதர்கள் நடமாடுகின்றனர். அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன். உலகளவில் தமிழ்சினிமா வளர்வதற்கு தமிழ் ரசிகர்கள் உலகளாவிய ரசினையுடன் தமிழ்சினிமாவை வரவேற்க்கவேண்டும் ...

பி .கு : மாதம் முடிவதால் அவசரமாக  மரண மொக்கை வெளியிட்டுள்ளேன் படித்தவர்கள் மறந்துவிடுங்கள் ... 




Sunday, 30 September 2012

காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...

   இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும்   பிறத்தது முதல்  தன்  உயிரை காத்து கொள்ள போராடுகிறான்..     அவனை  மனதளவில்    கொல்ல பணப்பேயிகள்  நடமாடி கொண்டே  இருக்கின்றன. அவைகளிடமிருந்து   மக்களை காப்பாத்த யாருமே இல்லையா மை லாட் (நீதி) 

  மனிதன் மனதளவில் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்புக்கு  உள்ளாகிறான்.
மனதழுத்ததினுடனே நோயாளி ஆக்கப்பட்டு சாகடிக்க படுகிறான். 

  மருத்துவமனைகள் மனிதனை நோயாளி ஆக்குவதில் முக்கியபங்கு வகிக்கின்றது, மருத்துவமனைகள் மனிதனின் நோயை அதிகபடுத்தி காசுப்பார்க்க துடிக்கின்றன. மருத்துவமனைக்கு போகும் மனிதர்களை மணிகணக்கில் காக்கவைத்து மனழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.
தங்களின் சுயலாபத்திர்க்காக மருந்துகளை எழுதிக்குவிக்கின்றனர் . 

       பல பொது பணியிடங்களில்  வேலை   செய்யும்   அரசு       மற்றும் தனியார்  
ஊழியர்கள்    சாதாரண மக்களின்           உணர்வுகளுக்கு    மதிப்பளிப்பதில்லை 
வாசகபலகைகளில் மட்டுமே மதிப்பு உள்ளது. 


  அரசு ஊழியர்களின் அலச்சியத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பாடுவது 
வாடிக்கையாகிவிட்டது.  பேருந்துகளில் பயணிப்பவர்கள் நடத்துனர்களும் ஓட்டுனர்களும் அவமதிக்கப்படுகின்றனர். அரசு வேலை என்பது அரசினுடைய வேலையாள்; அரசு என்பது மக்கள் என்பதை மறந்து அதிகார கர்வத்துடன் மக்களை மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து போராட அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சாதாரண மனிதர்களிடையே வலிமையிருப்பதில்லை.மனித உரிமைகள் சாதாரண மக்களுக்கு மறுக்கபடுகிறது.

   இன்றைய ஆட்சி நிலையை  பார்த்தால் மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் என்ற அறிக்கை வாசிக்கும் ஆட்சியாகவே உள்ளது. உயிருடன் இருப்பவனுக்கு பாதுகாப்பில்லை இறந்துவிடுங்கள் பணம் தருகிறோம் என்ற நிலையில் ஆட்சி. நடந்துவரும் விபத்துக்களும் இதையே   உணர்த்துகின்றன... 


 மக்களை கொன்று குவித்தவனுக்கும்,கொல்ல நினைப்பவனுக்கும் மனிதவுரிமையும்,சட்டமும் துணைநிர்க்கின்றது. சாதாரண மக்கள் வாழ்வதற்க்கான உரிமைக்கூட பணத்தாசை பிடித்த கயவர்களால் மறுக்கபடுகிறது.

  நாமும் சொல்லுகிறோம் நாம்நாடு சுகந்திரம் அடைத்துவிட்டது,
மக்களாட்சி  நடைபெறுகிறது  என்று உண்மை உலகறியும் தமிழகத்திலேயே தமிழன் வதைக்கபடுகிறான்....காப்பாத்துங்க மை லாட்  கொல்ல பாக்குறாங்க...

  கல்வி விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகவே மாறிவிட்டது .

  ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளகக்கொண்டு மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் செயல்ப்பட்டுவருகின்றனர் .அன்னிய முதலிடுகளை அனுமதித்து மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கின்றனர் .தன்னை தானே காத்துக்கொள்ளும் வலிமைபடைத்தவன் மட்டுமே  கயவர்களை எதிர்த்து வாழ முடிகிறது ...

இயலாதவனுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை இல்லாதவனுக்கும் கொடுத்து; இருப்பவனையும் இல்லாதவனக்கி விட்டனர் .



Wednesday, 5 September 2012

எல்லாருமே திருடங்கதான்

                                         
    இந்த பதிவு   எழுதநினைத்த போது முதலில் தோன்றிய  தலைப்பு
" உங்கள்மேல் குற்றம் இல்லாதவர் முதல்லில் கல்  எறியட்டும் " பின்பு  ஆன்மீக  வரியாக தோன்றியதால் மாற்றிவிட்டேன்  அலசநினைத்த கருத்தையும்  ஒரு நிகழ்ச்சி வடிவில் வளங்கியுள்ளேன்.            

(பின்னனியில் முதல்வன் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் )

  வணக்கம் நேயர்களே நம்முடைய "யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியின்
முதல் பதிவுக்கு அனைவரையும் வரவேற்க்கின்றேன் இன்று நாம் உரையாடயிருப்பது தமிழகத்தின் திருட்டுக்குடும்ப தலைவர் என மக்கள்
கருதும் மேதையுடன்.

                                                                          
புகழ்   :வணக்கம் ஐயா,
எக்ஸ்: வணக்கம் .

புகழ் :   ஐயா தமிழகத்திலேயே சிறந்த திருட்டுகுடும்பமாக உங்களை         தேர்ந்தெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறிங்க ?
எக்ஸ்: சந்தோசமா இருக்கு என்னோட வாரிசுங்க திருட்டுல உலகத்திலே முதலிடத்தில வருவாங்க.

புகழ் : ஆனா  நீங்க இப்போவிட்டுல இல்ல இருக்கிறிங்க இதுக்கு யாரு    காரணம் ?
எக்ஸ்:இந்த  கூத்து காரனுங்கதான் ஆப்பு வச்சுட்டானுங்க, ஒரு பாலம் கட்ட போய் ஒருத்தன் சீனுக்குள்ள வந்துட்டன் .

புகழ் : கூத்துல   கூடா உங்ககுடுப்பம் மத்தவங்கள  காசுபாக்க விடலயாமே ?
எக்ஸ்:தம்பி தெரியாம பேசக்கூடாது நானும்  கூத்துகட்டுனவந்தான் அப்புறம்
என்னோடபுள்ளங்க  கூத்து கட்டுன தப்ப?

புகழ் :தப்பில்லைங்க ஐயா ஆனா அடுத்தவன்  கூத்த ஓட விடமே பாண்டிக்காறதம்பி தட்டடிச்சாரமே ?
எக்ஸ்: கூத்து நல்லாயிருந்த ஓடும்,இன்னைக்கு  கூத்து  கூட   அடுத்தவனுங்ககிட்ட இருந்து களவாண்டு தான் எடுக்கிறான், இந்த குத்து கரபயலுங்க ஒழுங்க வருமான வரி  கூட கட்டுறதில்ல. கேட்ட கோட்டைக்கு
வர நிக்கிரானுங்க.

புகழ்:பக்கதுல நம்ம ஆளுங்களா கொன்னப்போ நிங்க பெருசா ஒன்னும் பண்ணலியே ?
எக்ஸ்: என்னால மரத்தடியில காத்து வாங்க தான் முடியும். அதுக்காக
சாகவா முடியும் ;அதன் இளவு நடந்தத மற(றை)க்க உலக நம்ம மாநாடு நடத்தினேனே போதாதா ?
அதுக்குமேலே என்னாலே ஒன்னும் மேலே சொல்ல முடியாது  அதுதான் சீனு...

புகழ் :"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியில் ஒரு  இடைவேளை


"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும்
ஒருக்கண்ணை மூடாதே "

"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சி தொடர்கிறது ...

புகழ் :ஐயா பாண்டியில பாறை களவாண்டிருகங்களே?
எக்ஸ்: நான் கொடுக்க வேண்டியது கொடுக்க சொன்னேன் கணக்கு தப்புல ஒரு போட்டி கொரன்சிடுச்சி அதான் புடிச்சிட்டானுங்க.

புகழ் :சமீபத்துல ஒரு  கூத்துகூட உங்கள பத்திதான் விமர்சிச்சிருக்காங்க?
எக்ஸ்: தம்பி இப்போ ஓடிட்டு இருக்க சீனு கூட என்ன பத்தினதுதான்
விமர்சிக்கிரவனுக்கு வேற வேலையில்ல , நீங்க சொன்ன   கூத்து  ஒரு மொக்க  கூத்து. பாக்க போனவங்கள நல்ல ஏமாத்தி காசுபாத்தானுங்க .

புகழ் :அடுத்தது என்ன செய்ய போறிங்க ?
எக்ஸ்: கல்ல நிரப்புது போல தெரியிது அடுத்த சீசணுல யப்படியாவது கோட்டைக்கு போகணும்.

புகழ் : கோட்டையில இருந்தப்போ முடியலேன்னு துனை வச்சீங்க இப்போ நல்ல தானே இருக்கிறிங்க ?
எக்ஸ்:அது தான்  சீனு முதல்ல கேமராவ ஆப்பண்ணுய....

புகழ் :நேயர்களே ஐயா சொன்னதாலே இன்றைய நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்திட்டோம்.
இன்றய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற  (எக்ஸ்)  "யாரேன தெரிகிறத" உடனே தெரின்சிக்கணும்.... ம்ம்ம்....

மீண்டும் அடுத்த திருடரை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் புகழ் ....
                           
பி .கு:இங்கு குறிப்பிட்டுள்ள எக்ஸ் மட்டும்  அல்ல நாம்  எல்லாருமே திருடங்கதான் ...

அடுத்த சந்திப்பு : கூத்துக்காரன் தளபதி ......

Sunday, 29 July 2012

2012-ல் தமிழ்த்திரைப்படங்கள்

        2012-ல்  வெளிவந்த தமிழ்த்திரைப்படங்கள் மக்கள்ப் பார்வையில்

இந்த ஆண்டு  தமிழ்த்திரையுலக முன்னனி நடிகர்களின்  படங்கள்  இதுவரை குறிப்பிடத்தக்க பெரிய வெற்றிப் பெறவில்லை...


ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த நண்பன் முதல்வெற்றியைப் பெற்றது. இந்தப்படம் 3இடியட்ஸ் படத்தின்  பதிப்பாகவே வெளிவந்தது படத்தின் கதை மற்றும் திரைக்கதை வலுவாக இருந்தப்படம் வெற்றி உறுதி செய்யப்பட்டே வெளிவந்தது.


லிங்குசாமி வேட்டை படம் மூலம் வெற்றிக்கனி பறித்தார். படத்தில் மாதவன், ஆர்யா, அமலப்பால், சமிர நடித்திருந்தனர் படம் கமர்ஷியல் வெற்றிப்பெற்றது.

3-பாடல்கள் மூலம் பரபரப்பை ஏற்ப்படுத்தியபடம்
ஆனால் மக்கள் மனதில் பதியவில்லை,
தனுஷின் முந்தைய படங்களையே நினைவுப்படுத்தியது. 



கிருஷ்ணாவின் நடிப்பில் வெளிவந்த கழுகு புதிய இயக்குனரின்  பரிசாக தமிழ்த்திரைக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருக்கட்சியும் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டு திரைகதையையும்,கதையையும் அலங்கரித்தது படத்தில் நடித்த அனைவரும்  சிறப்பாக நடித்திருந்தனர்.




இயக்குனர்  ராஜேஷ் தனது மூன்றாவது வெற்றியை ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் பதித்தார் கதை திரைக்கதையில் எந்தமாற்றமும் செய்யாமல் தனது முந்தய இருபடங்களை போலவே எடுத்திருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த படத்தின்மூலம் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகன் ஆனார். ஹரிஸ்  பாடல்களும் படத்திற்கு உதவின.



மனம் கொத்தி பறவை இளமை காதலை இனிமையாக சொன்னப்படம். படம் நகைசுவையுடனும் இனிமையான பாடல்களுடனும் வெற்றிக்கண்டது.

கார்த்தி ஹிரோயிசத்தல் சகுனி படம் மூலம் முதல் தோல்வி கண்டார். 





நான்  ஈ மிகுந்த எதிர்பார்புகளுடன் வந்த படம் அதையும் தாண்டி வெற்றிமகுடம் சூடியது. இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹாட்ரிக் வெற்றி வசப்படுத்தினர் ராஜமௌலி. படத்தில் கிராபிக்ஸ் சரியாக பயன்படுத்தப்பட்டது.


பில்லா 2 பின்னனியிசை மற்றும் திரைக்கதையால் பெரிய வெற்றியை இழந்தது.

அம்புலி,காதலில் சொதப்புவது எப்படி,அரவான்,வழக்கு எண் 18/9,மெரினா  
ஆகிய படங்களும் மக்களால் பாராட்டப்பட்டன...

ஆண்டின் இரண்டாம் பருவத்தில் எதிர்ப்பார்ப்புடன் வந்த பெரிய நடிகர்களின் படங்களும் வரிசையாக தோல்வியடைந்த (முகமூடி,தாண்டவம்,மாற்றான் )

சுந்தரபாண்டியன்,பிட்சா படங்கள் ஓரளவு வெற்றியை தந்தது. குறிப்பாக  பிட்சா பாரட்ட பட வேண்டும் .

தூக்கி விட வந்த துப்பாக்கி துணையாகவே அமைந்தது , முருகதாஸ் இயக்கத்தால் படம் தோல்வியிலிருந்து தப்பித்தது , பாடல்கள் விஜய் படங்களில் வெற்றி அடைவது வாடிக்கை அது பிழைக்கவில்லை ,படத்தில் இராணுவம் பெருமை படுகிறது.


 நீ தானே என் பொன்வசந்தம் பாடல்கள் எதிர்பர்க்கபட்டு எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாததால்;  படம் தோல்வி அடைந்தது எதிர்பார்த்ததே...

நீர்பரவை, கும்கி, நடுவில கொஞ்சம் பக்கத்த காணேம் படங்கள் மக்களால் பேசப்படுகின்றன.

மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு இனிக்கவில்லை ...

                                                                         

Thursday, 26 July 2012

மலையாளத்தில் ஒரு பிளாக் காமெடி

(പത്മശ്രീ ഭരത് ഡോക്ടർ സരോജ് കുമാർ)

மலையாளத்தில் இந்த வருடம் வெளிவந்துள்ள பத்மஸ்ரீ
பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படம் சினிமாவில் உள்ள ஹிரோயிசத்தை மையமாகக்கொண்டு திரைக்கதை அமைக்கபட்டுள்ளப்படம்.

படம் திரைக்கு வருவதற்க்கு முன்பே மலையாள
முன்னனிநடிகரான மோகன்லலுடன் படத்தினியக்குனரும் நடிகருமான  ஸ்ரீனிவாசன்  மீடியாக்கள் மூலம் மோதிக்கொண்டார்.

படத்தில் உள்ள சிலக்காட்சிகள் மோகன்லாலுடன்  பொருந்தினாலும் படம் முழுவதுமாக பார்க்கும்போது தமிழ்சினிமாவின் இன்றய நிலையையே காட்டுகிறது.

மலையாள திரைப்படங்களில் நடிகர்களாலும்; இயக்குனர்களும் தமிழர்களை  அவமதிப்பது இது புதிதல்ல, என்றாலும் இதில் உள்ள உண்மைகளையும் மறுப்பதற்கில்லை .

படம் வெளியாகிய அன்றையதினமே வெற்றிவிழா கொண்டாடுவது,
படத்தின் கதையை மாற்றியமைப்பது, லாஜிக் இல்லாத மிகைபடுத்தும்  காட்சியமைப்பு, விளம்பரத்துறையில் ஆதிக்கம் போன்றவை தமிழ்சினிமாவில் அதிகரித்துவிட்டன.
பத்மஸ்ரீ பாரத் Dr .சரோஜி குமார் திரைப்படத்தின் முதல்பாகமான 
உடயனணு தரம்  தமிழில் வெள்ளித்திரை என்றபெயரில் ரீமேக்  செய்யப்பட்டு 
2008 ஆண்டு வெளிவந்தது.

இந்த படத்திலும் நடிகர்களின் ஹிரோயிசத்தை சுட்டிக்காட்டியிருப்பர்கள்.
ஆனால் இப்போது ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எந்த பெரிய நடிகர் நடித்த படமானாலும் மக்கள் மனதை கவரும் படங்களே நிலையான வெற்றியை பெறுகின்றன.

மலையாலத்திரையுலகம் தன்பாரம்பெரிய கதைகளை  விட்டு விட்டு முழுக்க
கமொர்சியல் பக்கம் திரும்புவதால்; தமிழில் வெளியாகும் நல்ல கதைகள் அந்த மண்ணிலும் பெரிய வெற்றி கண்டுவருகின்றன. இதன் விளைவாகவே சிலர் தமிழ்நாட்டை தங்கள் படங்களில் அவமதித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் சிறந்த நடிகர்களும் இயக்குனர்களும் உருவாகிவருவதால் தமிழ்சினிமா விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை அடையும் என்பதில்
சந்தேகம்  இல்லை. ஆனால் அதற்க்கு ரசிகர்களும் துணைநிற்க வேண்டும்.

விளம்பரங்களை நம்பாமல் சிறந்த திரைப்படங்களை வெற்றி பெற செய்ய வேண்டும், பெரிய நட்சத்திரத்தின் படமானாலும் தகுதி இல்லாத படங்களை உண்மை விமர்சனங்களால் களையறுக்க வேண்டும்.

தமிழ்சினிமா உலகளவில் உயர்ந்து விளங்கட்டும் .